செய்திகள் :

மானநஷ்ட ஈடு வழக்கு! தோனி வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்குரைஞர் ஆணையர் நியமனம்!!

post image

சென்னை: நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 2014-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் கூறியதாக, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன், இந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட் ஆகியோருக்கு எதிராக, நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தோனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வழக்கில் சாட்சி விசாரணையை தொடங்க வேண்டும். அதற்கு வாக்குமூலம் அளிக்க முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளார்.

பிரபலமானவர் என்பதால், தோனி, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க நேரில் ஆஜரானால் குழப்பங்கள் ஏற்படும். எனவே, தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். அக். 20- ஆம் தேதியில் இருந்து டிச.10-ஆம் தேதிக்குள், அனைத்து தரப்பினரின் வசதிக்கு ஏற்ற ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்தால், அங்கு வாக்குமூலம் அளிக்க தயார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்று, தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்த நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் பட்டியலில் இருந்து வழக்கறிஞர் ஆணையரை தேர்வு செய்வதாக தெரிவித்தார். தோனியின் வாக்குமூல பதிவுக்குப் பின், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கைது: தவெக தலைவர் விஜய் கண்டனம்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநில... மேலும் பார்க்க

திருப்பூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 7 புதிய அறிவிப்புகள்!

திருப்பூர் மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 7 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 11) திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பண... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று 5, நாளை 3 மாவட்டங்களிலும் கனமழை!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களிலும், நாளை 3 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,11-08-2025: தமிழகத்தில் ஒ... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்... மேலும் பார்க்க

முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவுக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு! உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு தாக்கப்பட்ட வழக்கில் காவல்துறை டிஎஸ்பி, ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை... மேலும் பார்க்க