செய்திகள் :

அல்-ஜசீரா செய்தியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 6 பேர் பலி!

post image

காஸா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அல்-ஜசீரா செய்தியாளர்களைகுறிவைத்து நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாததிலிருந்து காஸா பகுதிகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து போர்தொடுத்து வருகின்றது. இதில் சுமார் 70 ஆயிரத்துக்கும மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இஸ்ரேலிய ராணுவம் அல்-ஜசீரா செய்தியாளர்களை குறிவைத்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் நான்கு பத்திரிகையாளர் உள்பட ஆறு பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் அல்-ஜசீரா செய்தியாளர்கள் அனஸ் அல்-ஹெரிப் மற்றும் முகமது குரைகா உள்ளிட்டோர் 4 பத்திரிகையாளர்கள் மற்றும் 2 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் அனைவரும் ஷிபா மருத்துவமனையில் கூடியிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் மருத்துவமனை வளாகத்தின் அவசர பிரிவு கட்டடத்தின் நுழைவாயிலையும் சேதப்படுத்தியது.

இஸ்ரேல் மற்றம் காஸா நகர மருத்துவமனை அதிகாரிகளும் இந்த உயிரிழப்பை உறுதிப்படுத்தினர். இது காஸாவில் போரை ஆவணப்படுத்தியவர்களுக்கு எதிரான பழிவாங்கல் என்று தெரிவித்துள்ளனர். போரின்போது பத்திரிகையாளர் கொல்லப்பட்டது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் சம்பவம் இதுவாகும்.

காஸாவில் குறைந்தது 186 பத்திரிகையாளர்கள் இதுவரை கொல்லப்பட்டதாகப் பத்திரிகையாளர் பாதுகாப்பதற்கான குழு ஞாயிறன்று தெரிவித்துள்ளது.

Israel's military targeted an Al Jazeera correspondent with an airstrike Sunday, killing him, another network journalist and at least six other people, all of whom were sheltering outside the Gaza City Hospital complex.

இந்த நாடு, 2025க்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும்! எலான் மஸ்க் எச்சரிக்கை

ஜப்பான் நாட்டில் மக்கள் தொகை அண்மை ஆண்டுகளில் வெகுவாக சரிந்து வரும் நிலையில், 2025 இறுதிக்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.அமெரிக்க தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலா... மேலும் பார்க்க

இந்த வார்த்தைகள் உங்களை அடைந்தால்.. அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு

காஸா மீது, இஸ்ரேல் நடத்திய மிகக் கோரமான தாக்குதலில், செய்தியாளர்களின் முகாமில் இருந்த அனஸ் அல்-ஷரீஃப் உள்பட 5 அல் ஜஸீரா செய்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டனர்.28 வயதே ஆன அல் ஜஸீரா செய்தியாளர் அ... மேலும் பார்க்க

புதின் - டிரம்ப் பேச்சு: ரஷியா, உக்ரைன், அமெரிக்கா நிலைப்பாடு என்ன?

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷிய அதிபா் புதினுடன் அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரஷியா, உக்ரைன், அமெரிக்கா மூன்று நாடுகளும... மேலும் பார்க்க

ஆப்கனில் ஐ.நா. பணியிலுள்ள பெண்களுக்கு கொலை மிரட்டல்: தலிபான் அரசு விசாரணை!

ஆப்கானிஸ்தானில் தங்களின் அமைப்பில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, இதுதொடா்பாக தலிபான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.410 கோடி இழப்பு!

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், அந்நாட்டுக்கு 2 மாதங்களில் ரூ.410 கோடி (பாகிஸ்தான் ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல... மேலும் பார்க்க

மருத்துவர்களை விட ஏஐ சிறந்தது: எலான் மஸ்க்

மருத்துவர்களை விட செய்யறிவு தொழில்நுட்பம் சிறந்தது என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மருத்துவ துறையில் மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒன்றாக செய்யறிவு தொழில்நுட்பம் மேம்ப... மேலும் பார்க்க