செய்திகள் :

ஆப்கனில் ஐ.நா. பணியிலுள்ள பெண்களுக்கு கொலை மிரட்டல்: தலிபான் அரசு விசாரணை!

post image

ஆப்கானிஸ்தானில் தங்களின் அமைப்பில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, இதுதொடா்பாக தலிபான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த 2021-இல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆப்கானிஸ்தானில் பெண்களுக்குப் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2022 டிசம்பரில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் (என்ஜிஓ-க்கள்) பெண்கள் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்தனா்.

தலிபான்களின் ஆடை கட்டுப்பாடுகளைப் பெண்கள் பின்பற்றாததால், தொண்டு நிறுவனங்கள் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதைத் தவிா்க்குமாறும் உத்தரவிடப்பட்டது. அடுத்த 6 மாதங்களில் ஐ.நா.வுக்கும் இத்தகைய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. உதவி இயக்கம் அண்மையில் வெளியிட்ட மனித உரிமைகள் குறித்த அறிக்கையில், கடந்த மே மாதம் ஐ.நா.வில் பணிபுரியும் ஆப்கானிய பெண்களுக்கு அவா்களது பணி காரணமாக கொலை மிரட்டல்கள் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெண் ஊழியா்களின் பாதுகாப்புக்காக ஐ.நா. அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த மிரட்டல்கள் தொடா்பாக ஐ.நா. சபைக்கு தலிபான்கள் அளித்த விளக்கத்தில், இந்த அச்சுறுத்தல்களுக்கு தலிபான் படையினா் பொறுப்பல்ல. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது என்று கூறியுள்ளனா்.

மேலும், ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான பிற கட்டுப்பாடுகளையும் ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஹெராத் மாகாணத்தில் பெண்கள் பா்தா அணியுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகவும், உருஸ்கானில் ஹிஜாப் மட்டும் அணிந்ததற்காக பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மாகாணங்களில் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காந்தஹாரில் பெண் சுகாதாரப் பணியாளா்கள் ரத்த உறவுமுறையான ஆண் பாதுகாவலா் இல்லாமல் வேலைக்கு வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதைக் காட்டுவதாக அறிக்கை தெரிவிக்கிறது.

புதின் - டிரம்ப் பேச்சு: ரஷியா, உக்ரைன், அமெரிக்கா நிலைப்பாடு என்ன?

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷிய அதிபா் புதினுடன் அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரஷியா, உக்ரைன், அமெரிக்கா மூன்று நாடுகளும... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.410 கோடி இழப்பு!

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், அந்நாட்டுக்கு 2 மாதங்களில் ரூ.410 கோடி (பாகிஸ்தான் ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல... மேலும் பார்க்க

மருத்துவர்களை விட ஏஐ சிறந்தது: எலான் மஸ்க்

மருத்துவர்களை விட செய்யறிவு தொழில்நுட்பம் சிறந்தது என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மருத்துவ துறையில் மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒன்றாக செய்யறிவு தொழில்நுட்பம் மேம்ப... மேலும் பார்க்க

டிரம்ப் விருந்துக்கு மறுப்பு! அமெரிக்க வரலாற்றை மாற்றியமைக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட ஆஸ்கர் நடிகை!

ஒருநாள் இரவு விருந்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைத்ததாக பிரிட்டிஷ் நடிகை கூறியது பேசுபொருளாகியுள்ளது.ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் பிரிட்டிஷ் நடிகை எம்மா தாம்சனுக்... மேலும் பார்க்க

காஸாவின் விடுதலையே இஸ்ரேலின் இலக்கு! - நெதன்யாகு

காஸாவில் இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார்.ஜெருசலேமில் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “எங்களது குறிக்கோள் காஸாவை கையகப்படுத்து... மேலும் பார்க்க

மீண்டும் அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி: அமெரிக்க தலைவர்களுடன் சந்திப்பு!

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ராணுவ உயரதிகாரிகளையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்... மேலும் பார்க்க