செய்திகள் :

மீண்டும் அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி: அமெரிக்க தலைவர்களுடன் சந்திப்பு!

post image

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ராணுவ உயரதிகாரிகளையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம், ஆசிம் முனீர் 5 நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, வெள்ளை மாளிகையில் அவருக்கு அதிபர் டிரம்ப் விருந்தளித்தார்.

இந்தநிலையில், அவரது இந்த திடீர் பயணம் எதற்காக என்பது குறித்தும் அவர் எத்தனை நாள்கள் அங்கிருப்பார் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனிடையே, ஆசிம் முனீர் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளி மக்களிடையே உரையாற்றியிருப்பதும் கவனிக்கத்தக்கது. அப்போது அவர், ‘பாகிஸ்தானுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாகவும், பாகிஸ்தானில் அதிக முதலீடு செய்யவும்’ அழைப்பு விடுத்துள்ளார்.

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பாகிஸ்தானுடன் அதிக நெருக்கம் பாராட்டி வருவதை இந்தச் சந்திப்பு பிரதிபலிக்கிறது. பாகிஸ்தானின் தலைமைப் பதவிக்கு ஆசிம் முனீர் இலக்கு நிர்ணயித்து செயல்படுவதாக அந்நாட்டின் அரசியல் வட்டாரங்கள் எதிரொலிக்கும் நிலையில், அதை மெய்ப்பிக்கும் விதத்தில் மேற்கண்ட செயல்பாடுகள் அமைந்துள்ளதும் கவனிகத்தக்கது.

Pakistan Army chief Asim Munir, who is visiting Washington for the second time since the four-day conflict with India, has met top US political and military leaders, the army said on Sunday.

காஸாவின் விடுதலையே இஸ்ரேலின் இலக்கு! - நெதன்யாகு

காஸாவில் இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார்.ஜெருசலேமில் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “எங்களது குறிக்கோள் காஸாவை கையகப்படுத்து... மேலும் பார்க்க

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஸா சிட்டி முழுவதையும் படை பலத... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி இழப்பு!

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தான் விமானநிலையங்கள் நிர்வாகம் (பிஏஏ) ரூ. 123 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதற்கான மு... மேலும் பார்க்க

பாலஸ்தீன பீலே கொலை..! யுஇஎஃப்ஏவை விமர்சித்த சாலா!

பாலஸ்தீன பீலே எனப்படும் கால்பந்து வீரர் சுலைமான் அல்-ஒபெய்டு இஸ்ரேலிய தாக்குதலில் பலியானதுக்கு பதிவிட்ட யுஇஎஃப்ஏவை பிரபல கால்பந்து வீரர் முகமது சாலா விமர்சித்துள்ளார். தெற்கு காஸாவில் மனிதாபிமான உதவிக... மேலும் பார்க்க

காஸா பட்டினிச் சாவு எண்ணிக்கை 212-ஆக உயா்வு

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ... மேலும் பார்க்க

ரஷியாவின் முதல் துணைப் பிரதமருடன் அஜீத் தோவல் சந்திப்பு

ரஷியாவின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரோவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ரஷிய தலைநகா் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா். ரஷியா... மேலும் பார்க்க