செய்திகள் :

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி இழப்பு!

post image

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் விமானநிலையங்கள் நிர்வாகம் (பிஏஏ) ரூ. 123 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதற்கான முக்கிய காரணம், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் வெளியை பயன்படுத்த தடை விதித்ததுதான்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதன் எதிரொலியாக, ஏப்ரல் 24முதல் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து, ஒருநாளைக்கு 100 - 150 இந்திய விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக, விமான போக்குவரத்தும் 20 சதவீதம் வரை குறைந்ததால் பாகிஸ்தானுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருப்பதை பாகிஸ்தான் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 24 தொடங்கி ஜூன் முடிய வரையிலான சுமார் இரண்டே மாதங்களில் பாகிஸ்தான் விமானநிலையங்கள் நிர்வாகம் (பிஏஏ) ரூ. 123 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

Pakistan lost Rs 123 crore in just two months due to actions against India!

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஸா சிட்டி முழுவதையும் படை பலத... மேலும் பார்க்க

பாலஸ்தீன பீலே கொலை..! யுஇஎஃப்ஏவை விமர்சித்த சாலா!

பாலஸ்தீன பீலே எனப்படும் கால்பந்து வீரர் சுலைமான் அல்-ஒபெய்டு இஸ்ரேலிய தாக்குதலில் பலியானதுக்கு பதிவிட்ட யுஇஎஃப்ஏவை பிரபல கால்பந்து வீரர் முகமது சாலா விமர்சித்துள்ளார். தெற்கு காஸாவில் மனிதாபிமான உதவிக... மேலும் பார்க்க

காஸா பட்டினிச் சாவு எண்ணிக்கை 212-ஆக உயா்வு

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ... மேலும் பார்க்க

ரஷியாவின் முதல் துணைப் பிரதமருடன் அஜீத் தோவல் சந்திப்பு

ரஷியாவின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரோவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ரஷிய தலைநகா் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா். ரஷியா... மேலும் பார்க்க

நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல் நினைவுநாள்

ஜப்பானின் நாகசாகி நகரம் மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலின் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக அந்த நகரில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் 95 நாடுகளைச... மேலும் பார்க்க

காங்கோ: பொதுமக்கள் 80 போ் படுகொலை

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்கள் அண்மை வாரங்களில் 80 பேரை படுகொலை செய்தனா். இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில வ... மேலும் பார்க்க