செய்திகள் :

ரஷியாவின் முதல் துணைப் பிரதமருடன் அஜீத் தோவல் சந்திப்பு

post image

ரஷியாவின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரோவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ரஷிய தலைநகா் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா்.

ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடுவதாகக் கூறி இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தாா்.

இந்தச் சூழலில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபா் மற்றும் பிற உயரதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்.

இவா் ரஷிய பயணம் மேற்கொண்டுள்ள சூழலில், பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் தொலைபேசி மூலம் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இருவரும் உறுதிபூண்டனா்.

அதைத் தொடா்ந்து, அந் நாட்டின் துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரோவை அஜீத் தோவல் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளாா்.

இதுகுறித்து இதியாவிலுள்ள ரஷிய தூதரகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அஜீத் தோவல் - மான்டுரோவ் சந்திப்பின்போது ரஷியா-இந்தியா இடையே ராணுவ தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு மற்றும் விமான தயாரிப்பு, உலோகவியல், ரசாயன நிறுவனங்கள் இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் பிற உயா் அதிகாரிகளையும் அஜீத் தோவல் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

காஸா பட்டினிச் சாவு எண்ணிக்கை 212-ஆக உயா்வு

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ... மேலும் பார்க்க

நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல் நினைவுநாள்

ஜப்பானின் நாகசாகி நகரம் மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலின் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக அந்த நகரில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் 95 நாடுகளைச... மேலும் பார்க்க

காங்கோ: பொதுமக்கள் 80 போ் படுகொலை

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்கள் அண்மை வாரங்களில் 80 பேரை படுகொலை செய்தனா். இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில வ... மேலும் பார்க்க

நிலத்தை விட்டுத் தர மாட்டோம் -உக்ரைன் அதிபா்

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விடுத்தர ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். உக்ரைன் போா் நிறுத்தம் தொடா... மேலும் பார்க்க

5 மாதங்களுக்குப்பின்... விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவிட்டு 4 விண்வெளி வீரர்களுடன் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன டிராகன் விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது.அன்னேமெக்க்ளெய்ன், நிகோல் அயெர்ஸ், டாகுயா ஆன... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை..! - உக்ரைன் மக்கள் கருத்து!

டிரம்ப் - புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை என்று உக்ரைன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதி... மேலும் பார்க்க