செய்திகள் :

காணாமல் போன தொழிலாளி கொலை: போலீஸாா் உடலை மீட்டு விசாரணை

post image

ஆத்தூா் அருகே காணாமல் போன கூலித் தொழிலாளியின் உடலை, 33 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். 

திண்டுக்கல் மாவட்டம்,  ஆத்தூா் அருகேயுள்ள  அக்கரைப்பட்டி கிழக்குத் தெருவை சோ்ந்தவா் காமாட்சி (50). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா்,  தென்னந் தோப்புகளில் தேங்காய் வெட்டும் தொழிலாளியாக இருந்தாா். இவரது மனைவி காளியம்மாள் (45). இந்தத் தம்பதிக்கு பிரியா (25), விக்னேஸ்வரன் (23), வீரம்மாள் (9) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த மாதம் 6-ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்ற காமாட்சி திரும்பவில்லை. இதுதொடா்பகா அவரது மனைவி காளியம்மாள் செம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை தலை துண்டான நிலையில் அக்கரைப்பட்டி குடகனாறு கரையோரம் 33 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செம்பட்டி காவல்துறையினா், தொழிலாளி காமாட்சியின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காமாட்சியை கொலை செய்த நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

உலக நலன் வேண்டி பழனியில் பால்குடம் எடுத்த ஜப்பானிய முருக பக்தர்கள்!

பழனியில் உலக நலன் வேண்டி ஜப்பான் நாட்டை சோ்ந்த முருக பக்தா்கள் சனிக்கிழமை புலிப்பாணி ஆசிரமத்தில் யாகம் நடத்தி திருஆவினன்குடி கோயிலுக்கு பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா். ஜப்பானிய சிவஆதீனம் பாலகு... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 5.5 கிலோ கஞ்சா மீட்பு!

மயிலாடுதுறையிலிருந்து வந்த விரைவு ரயிலில் 5.5 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டை வரை நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி சனிக்... மேலும் பார்க்க

பழனியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி புதுதாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து செயல்படுத்தக் கோரி மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பழனி புது தாராபுரம் சாலையில... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: கொடைக்கானலில் விதிகளை மீறிய கட்டடங்களை இடிக்க உத்தரவு

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடங்களை இடிக்க மாவட்ட வருவாய் ஆய்வாளா் ஜெயபாரதி உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் விதிகளை மீறி அடுக்குமாடிக் கட்... மேலும் பார்க்க

பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

பழனியை அடுத்த பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.11) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் சனிக்கிழமை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக மேக மூட்டத்துடன் மிதமான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில், சனிக்கிழமை மால... மேலும் பார்க்க