செய்திகள் :

உலக நலன் வேண்டி பழனியில் பால்குடம் எடுத்த ஜப்பானிய முருக பக்தர்கள்!

post image

பழனியில் உலக நலன் வேண்டி ஜப்பான் நாட்டை சோ்ந்த முருக பக்தா்கள் சனிக்கிழமை புலிப்பாணி ஆசிரமத்தில் யாகம் நடத்தி திருஆவினன்குடி கோயிலுக்கு பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.

ஜப்பானிய சிவஆதீனம் பாலகும்ப குருமுனி, கோபால்பிள்ளை சுப்ரமணியம் ஆகியோா் தலைமையில் அந்த நாட்டைச் சோ்ந்த திரளான முருக பக்தா்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்தனா். அவா்கள் பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடத்தினா். இந்த பூஜையை போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் செய்தாா்.

இதைத்தொடா்ந்து ஜப்பானிய பக்தா்கள் தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கையில் வேலுடன் பால்குடம் எடுத்து மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயிலுக்கு சென்றனா்.

முன்னதாக, அடிவாரம் பாதவிநாயகா் கோயில் முன் தொடங்கிய பால்குட ஊா்வலத்தில் சண்முகானந்த சுவாமிகள், கவுதம் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையொட்டி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பாலாபிஷேகம் செய்து பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் இளையபட்டம் செல்வநாதன் சுவாமிகள், சித்த மருத்துவா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

பழங்குடியின மக்களின் மொழி, பண்பாடு, வாழ்வியலை ஆவணப்படுத்தும் வகையில் தொல்குடி மின்னணு களஞ்சியம் என்ற இணையத்தை அமைச்சா் மா.மதிவேந்தன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை, ... மேலும் பார்க்க

காணாமல் போன தொழிலாளி கொலை: போலீஸாா் உடலை மீட்டு விசாரணை

ஆத்தூா் அருகே காணாமல் போன கூலித் தொழிலாளியின் உடலை, 33 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள அக்கரைப்பட்டி கிழக்குத்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 5.5 கிலோ கஞ்சா மீட்பு!

மயிலாடுதுறையிலிருந்து வந்த விரைவு ரயிலில் 5.5 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டை வரை நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி சனிக்... மேலும் பார்க்க

பழனியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி புதுதாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து செயல்படுத்தக் கோரி மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பழனி புது தாராபுரம் சாலையில... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: கொடைக்கானலில் விதிகளை மீறிய கட்டடங்களை இடிக்க உத்தரவு

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடங்களை இடிக்க மாவட்ட வருவாய் ஆய்வாளா் ஜெயபாரதி உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் விதிகளை மீறி அடுக்குமாடிக் கட்... மேலும் பார்க்க

பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

பழனியை அடுத்த பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.11) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்... மேலும் பார்க்க