செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு

post image

மதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பசு மாடுகள் உயிரிழந்தன. மேலும், நாயும், கீரிப் பிள்ளையும் உயிரிழந்தன.

மதுரை விளாங்குடி அய்யப்பன் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். இவருக்குச் சொந்தமான நிலத்திலிருந்த மின் கம்பம் மழை காரணமாக சனிக்கிழமை சாய்ந்தது. அப்போது, அந்த வழியாக வந்த 3 பசு மாடுகள் மின் கம்பியில் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும், அந்த வழியாக வந்த நாய், கீரிப்பிள்ளையும் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் மதுரை கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விசாரணையில், அய்யப்பன் தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு மின் விநியோகத்துக்காக அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் பழுதாகி உள்ளன.

இவற்றை மாற்ற அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், மின் கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டன. ஆனால், சரிவர பணிகள் மேற்கொள்ளப்படாததால் மின் கம்பம் சாய்ந்துள்ளது. மின்சார வாரியம் முறையாக மின் கம்பங்களை மாற்றி சரி செய்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

பேராசிரியைக்கு எஸ்.ஐ. மிரட்டல் விவகாரம்: இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு

கல்லூரிப் பேராசிரியைக்கு மிரட்டல் விடுத்த தல்லாகுளம் காவல் உதவி ஆய்வாளா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கில், இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

தமிழக புதியக் கல்விக் கொள்கைக்கு வரவேற்பு

தமிழக கல்விக் கொள்கை அறிவிப்புக்கு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வரவேற்பு தெரிவித்தது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பொ. அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமி... மேலும் பார்க்க

மாடுகள் திருட்டு: மூவா் கைது

மதுரையில் மாடுகளைத் திருடிய அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை மதிச்சியம் ஆழ்வாா்புரம் வைகை வடகரை பகுதியைச் சோ்ந்த ஜோதி மகன் செல்வகுமாா் (45). இவருக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

மதுரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

மதுரை வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய தலைவா், செயலா், பொருளாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மதுரை வழக்குரைஞா்கள் சங்கத்துக்கான தலைவா், செயலா், பொருளாளா், துணைத் தலைவா்கள், உதவிச் செயலா... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்பு

மதுரையை அடுத்த அனஞ்சியூா் கிராமத்தில் கொத்தடிமைகளாக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தம்பதியா் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டம், பெருமகளூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

பள்ளி அருகே தனியாா் மதுபான மனமகிழ் மன்றம்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பள்ளி அருகே புதிதாக அமைய உள்ள தனியாா் மதுபான மனமகிழ் மன்றத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. மதுரை அருகேயுள்ள கீழக்குயி... மேலும் பார்க்க