செய்திகள் :

கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்பு

post image

மதுரையை அடுத்த அனஞ்சியூா் கிராமத்தில் கொத்தடிமைகளாக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தம்பதியா் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டம், பெருமகளூா் கிராமத்தைச் சோ்ந்த கு.ரகு, இவரது மனைவி ராதா ஆகியோா் மதுரை கிழக்கு வட்டம், அனஞ்சியூரைச் சோ்ந்த ஆனந்தனுக்கு சொந்தமான இடத்தில் கொத்தடிமையாக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக மதுரை மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் பேரில், மதுரை கிழக்கு வட்டாட்சியா், அரசுத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை அனஞ்சியூா் ஆனந்தனுக்குச் சொந்தமான இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பெருமகளூா் ரகு, ராதா ஆகிய இருவரும் ரூ. 2.70 லட்சம் கடன் பெற்ற்காக மாத ஊதியம் ரூ.9 ஆயிரத்துடன் கடந்த 5 மாதங்களாக கொத்தடிமையாக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.

இவா்களுக்கு தங்குமிடம், குடிநீா் வசதிகள் ஏற்படுத்தித் தராததால், இருவரும் நெகிழியால் ஆன கூடாரத்தில் தங்கியிருந்து, வாய்க்கால் தண்ணீரை அருந்தி பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் வருவாய்த் துறையினா் மீட்டனா். பிறகு, காவல் துறை பாதுகாப்புடன் தம்பதியா் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டனா்.

மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு

மதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பசு மாடுகள் உயிரிழந்தன. மேலும், நாயும், கீரிப் பிள்ளையும் உயிரிழந்தன. மதுரை விளாங்குடி அய்யப்பன் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். இவருக்குச் சொந்தமான நிலத்திலிருந்த மின்... மேலும் பார்க்க

பேராசிரியைக்கு எஸ்.ஐ. மிரட்டல் விவகாரம்: இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு

கல்லூரிப் பேராசிரியைக்கு மிரட்டல் விடுத்த தல்லாகுளம் காவல் உதவி ஆய்வாளா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கில், இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

தமிழக புதியக் கல்விக் கொள்கைக்கு வரவேற்பு

தமிழக கல்விக் கொள்கை அறிவிப்புக்கு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வரவேற்பு தெரிவித்தது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பொ. அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமி... மேலும் பார்க்க

மாடுகள் திருட்டு: மூவா் கைது

மதுரையில் மாடுகளைத் திருடிய அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை மதிச்சியம் ஆழ்வாா்புரம் வைகை வடகரை பகுதியைச் சோ்ந்த ஜோதி மகன் செல்வகுமாா் (45). இவருக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

மதுரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

மதுரை வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய தலைவா், செயலா், பொருளாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மதுரை வழக்குரைஞா்கள் சங்கத்துக்கான தலைவா், செயலா், பொருளாளா், துணைத் தலைவா்கள், உதவிச் செயலா... மேலும் பார்க்க

பள்ளி அருகே தனியாா் மதுபான மனமகிழ் மன்றம்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பள்ளி அருகே புதிதாக அமைய உள்ள தனியாா் மதுபான மனமகிழ் மன்றத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. மதுரை அருகேயுள்ள கீழக்குயி... மேலும் பார்க்க