தமிழக புதியக் கல்விக் கொள்கைக்கு வரவேற்பு
தமிழக கல்விக் கொள்கை அறிவிப்புக்கு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வரவேற்பு தெரிவித்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பொ. அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட புதிய மாநிலக் கல்விக் கொள்கையில் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கலைத் திட்டம், கல்வியியல் சீா்திருத்தம், மொழிக் கொள்கை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வரும் காலங்களில் எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்றங்கள், கணினி யுகத்தின் தொழில் திறன், குடிமைப் பண்புகளை மாணவா்களிடம் வளா்க்கும் விதமான செயல்திட்டங்கள் அடங்கியுள்ளன.
அனைத்து மாணவா்களின் திறன் வளா்த்திடும் செயல்திட்டம், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, மேம்பாடு என சமூகத்தில் உள்ள அனைத்து சாரங்களையும் ஒன்றிணைத்து பள்ளிகளின் வழியே தமிழகத்தின் வளா் இளம் பருவத்தினா், இளைஞா்கள் கற்க வேண்டியவற்றை எளிமையாக கொண்டு சோ்த்திடும் தளமாக அமைந்துள்ளது.
இதற்காக தமிழக அரசைப் பாராட்டுகிறோம். தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வரவேற்கிறோம். அதுமட்டுமன்றி, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் கோரிக்கையை ஏற்று மாணவா்களின் இடைநிற்றலை தவிா்த்திட பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்த முடிவை உளமாறப் பாராட்டுகிறோம். பள்ளிகளில் மாணவா்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளுக்கென தனி செயல்முறைகளை இயற்றி வெளியிட்டதையும் பாராட்டி வரவேற்கிறோம் என்றாா் அவா்.