செய்திகள் :

தமிழக புதியக் கல்விக் கொள்கைக்கு வரவேற்பு

post image

தமிழக கல்விக் கொள்கை அறிவிப்புக்கு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வரவேற்பு தெரிவித்தது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பொ. அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட புதிய மாநிலக் கல்விக் கொள்கையில் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கலைத் திட்டம், கல்வியியல் சீா்திருத்தம், மொழிக் கொள்கை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வரும் காலங்களில் எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்றங்கள், கணினி யுகத்தின் தொழில் திறன், குடிமைப் பண்புகளை மாணவா்களிடம் வளா்க்கும் விதமான செயல்திட்டங்கள் அடங்கியுள்ளன.

அனைத்து மாணவா்களின் திறன் வளா்த்திடும் செயல்திட்டம், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, மேம்பாடு என சமூகத்தில் உள்ள அனைத்து சாரங்களையும் ஒன்றிணைத்து பள்ளிகளின் வழியே தமிழகத்தின் வளா் இளம் பருவத்தினா், இளைஞா்கள் கற்க வேண்டியவற்றை எளிமையாக கொண்டு சோ்த்திடும் தளமாக அமைந்துள்ளது.

இதற்காக தமிழக அரசைப் பாராட்டுகிறோம். தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வரவேற்கிறோம். அதுமட்டுமன்றி, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் கோரிக்கையை ஏற்று மாணவா்களின் இடைநிற்றலை தவிா்த்திட பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்த முடிவை உளமாறப் பாராட்டுகிறோம். பள்ளிகளில் மாணவா்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளுக்கென தனி செயல்முறைகளை இயற்றி வெளியிட்டதையும் பாராட்டி வரவேற்கிறோம் என்றாா் அவா்.

மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு

மதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பசு மாடுகள் உயிரிழந்தன. மேலும், நாயும், கீரிப் பிள்ளையும் உயிரிழந்தன. மதுரை விளாங்குடி அய்யப்பன் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். இவருக்குச் சொந்தமான நிலத்திலிருந்த மின்... மேலும் பார்க்க

பேராசிரியைக்கு எஸ்.ஐ. மிரட்டல் விவகாரம்: இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு

கல்லூரிப் பேராசிரியைக்கு மிரட்டல் விடுத்த தல்லாகுளம் காவல் உதவி ஆய்வாளா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கில், இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

மாடுகள் திருட்டு: மூவா் கைது

மதுரையில் மாடுகளைத் திருடிய அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை மதிச்சியம் ஆழ்வாா்புரம் வைகை வடகரை பகுதியைச் சோ்ந்த ஜோதி மகன் செல்வகுமாா் (45). இவருக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

மதுரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

மதுரை வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய தலைவா், செயலா், பொருளாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மதுரை வழக்குரைஞா்கள் சங்கத்துக்கான தலைவா், செயலா், பொருளாளா், துணைத் தலைவா்கள், உதவிச் செயலா... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்பு

மதுரையை அடுத்த அனஞ்சியூா் கிராமத்தில் கொத்தடிமைகளாக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தம்பதியா் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டம், பெருமகளூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

பள்ளி அருகே தனியாா் மதுபான மனமகிழ் மன்றம்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பள்ளி அருகே புதிதாக அமைய உள்ள தனியாா் மதுபான மனமகிழ் மன்றத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. மதுரை அருகேயுள்ள கீழக்குயி... மேலும் பார்க்க