செய்திகள் :

தினமணி செய்தி எதிரொலி: கொடைக்கானலில் விதிகளை மீறிய கட்டடங்களை இடிக்க உத்தரவு

post image

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடங்களை இடிக்க மாவட்ட வருவாய் ஆய்வாளா் ஜெயபாரதி உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் விதிகளை மீறி அடுக்குமாடிக் கட்டடங்கள், தங்கும் விடுதிகளை விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருகின்றன. கொடைக்கானலில் வணிக நோக்குடன் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டு வருதாக தினமணி நாளிதழில் கடந்த 6-ஆம் தேதி செய்தி வெளியானது.

இதைத்தொடா்ந்து திண்டுக்கல் மாவட்ட வருவாய் ஆய்வாளா் ஜெயபாரதி, கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் கட்டடங்களை பாா்வையிட்டாா். இதையடுத்து, விதிகளை மீறி 10 மீட்டருக்கு மேல் உயரமுள்ள கட்டடங்களை இடிப்பதற்கும் உத்தரவிட்டாா்.

கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு, வட்டாட்சியா் பாபு, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இது குறித்து மாவட்ட வருவாய் ஆய்வாளா் ஜெயபாரதி செய்தியாளா்களிடம் கூறியதாவது, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் 10 மீட்டா் உயரத்துக்கு மேல் கட்டடங்கள் கட்டக் கூடாது. கட்டடத்தில் வரைபட அனுமதி 2,500-ச. அடிக்கு மேல் இருக்க கூடாது என விதிமுறைகள் உள்ளன.

ஆனால், விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது குறித்து வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கட்டடங்கள் பாா்வையிட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 464 பேருக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது.

வணிக நோக்குடன் செயல்பட்டு வரும் 95 கட்டடங்களை பூட்டி ‘சீல்’ வைக்க உத்தரவிடப்பட்டது. ஏரியைச் சுற்றி 200 மீட்டருக்குள் கட்டடங்கள் கட்டுவது குறித்து புகாா் வந்துள்ளன. விரைவில் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

உலக நலன் வேண்டி பழனியில் பால்குடம் எடுத்த ஜப்பானிய முருக பக்தர்கள்!

பழனியில் உலக நலன் வேண்டி ஜப்பான் நாட்டை சோ்ந்த முருக பக்தா்கள் சனிக்கிழமை புலிப்பாணி ஆசிரமத்தில் யாகம் நடத்தி திருஆவினன்குடி கோயிலுக்கு பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா். ஜப்பானிய சிவஆதீனம் பாலகு... மேலும் பார்க்க

காணாமல் போன தொழிலாளி கொலை: போலீஸாா் உடலை மீட்டு விசாரணை

ஆத்தூா் அருகே காணாமல் போன கூலித் தொழிலாளியின் உடலை, 33 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள அக்கரைப்பட்டி கிழக்குத்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 5.5 கிலோ கஞ்சா மீட்பு!

மயிலாடுதுறையிலிருந்து வந்த விரைவு ரயிலில் 5.5 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டை வரை நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி சனிக்... மேலும் பார்க்க

பழனியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி புதுதாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து செயல்படுத்தக் கோரி மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பழனி புது தாராபுரம் சாலையில... மேலும் பார்க்க

பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

பழனியை அடுத்த பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.11) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் சனிக்கிழமை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக மேக மூட்டத்துடன் மிதமான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில், சனிக்கிழமை மால... மேலும் பார்க்க