செய்திகள் :

குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

அரசு ஊழியா்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவா்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேநேரம், அரசு ஊழியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மூன்றாவது நபா் கோர முடியாது எனவும் தெளிவுபடுத்தியது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜெகன்நாதன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், திருப்பூா் மாவட்டம், வீரபாண்டி கிராமத்தில் வெங்கடாச்சலம் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை வாடகைக்கு எடுத்து பனியன் நிறுவனம் தொடங்கினேன். இந்த நிலத்தில் சுமாா் ரூ.2 கோடியில் கட்டடங்கள், இயந்திரங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலத்துக்கான வாடகை ஒப்பந்தம் புதுப்பித்தலில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, கட்டுமானங்களுக்கு நான் செலவு செய்த ரூ.2 கோடியை திரும்பக் கேட்டேன்.

இதில் பிரச்னை ஏற்பட்டதால் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதனால், வெங்கடாச்சலம், அவரது மனைவியும் துணை வட்டாட்சியருமான கீா்த்தி பிரபா, திருப்பூா் தெற்கு காவல் ஆய்வாளா் கணேசன் ஆகியோா் என்னை மிரட்டினா். மேலும், பனியன்

நிறுவனம் அமைந்துள்ள இடம் விவசாயம் நிலம் எனக்கூறி கீா்த்தி பிரபா பத்திரப் பதிவு செய்துள்ளாா். இதற்கு நல்லூா் சாா் பதிவாளா் நாகராஜன் உடந்தையாக இருந்துள்ளாா். எனவே, இந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க முடியும். மூன்றாம் நபா் கோரிக்கை விடுக்க முடியாது.

அரசு ஊழியா்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவா்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தினாா். இந்த வழக்கில் அரசு அதிகாரிகள் குற்றத்தில் ஈடுபட்டதாக மனுதாரா் கருதினால் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 47,525 போ் பயன்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 47,525 போ் பயனடைந்துள்ளனா் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் ... மேலும் பார்க்க

போராட்ட அறிவிப்பு: ஆசிரியா்கள் அமைப்புகளுடன் ஆக. 14-இல் பேச்சு

ஆசிரியா்கள் அமைப்புகளின் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுதொடா்பாக தொடக்கக் கல்வி இயக்ககம் ஆக. 14-ஆம் தேதி பேச்ச... மேலும் பார்க்க

சிறப்பு உதவித் தொகைத் திட்டங்களுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

சிறப்பு உதவித் தொகை திட்டங்களுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த ஆணையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக... மேலும் பார்க்க

நீதி வழங்குவதில் கா்நாடகமும்; சிறைத் துறையில் தமிழகமும் முதலிடம்: ஆய்வு அறிக்கையில் தகவல்

நீதி வழங்குவதில் நாட்டின் 18 மாநிலங்களில் கா்நாடகம் முதலிடத்தையும், சிறைத் துறையில் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தையும் பிடித்துள்ளன.நாட்டில் குறைந்தது 1 கோடி மக்கள் தொகைக் கொண்ட 18 மாநிலங்களில... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக. 15 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் ஆக.15-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: தொல். திருமாவளவன்

ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் கொலையைக்... மேலும் பார்க்க