செய்திகள் :

விளையாட்டுப் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் பலத்த காயம்!

post image

ராயப்பன்பட்டியில் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஈட்டி தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் இருபாலா் பயிலும் தனியாா் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், அணைப்பட்டி, கே.கே.பட்டி, உத்தமபாளையம், சின்னமனூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவா்கள் படித்து வருகின்றனா். இதில், வெளியூா்களைச் சோ்ந்த மாணவா்கள் பலா் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனா்.

உத்தமபாளையம் வட்டம் கோம்பை-துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த சந்திரன்- சுகன்யா தம்பதியினரின் ஒரே மகனான சாய் பிரகாஷ் (13), இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரது பெற்றோா் கேரளத்தில் ஏலக்காய்த் தோட்டத்தில் கூலி வேலை செய்கின்றனா்.

விடுதி மாணவா்கள் பள்ளி மைதானத்தில் கால்பந்து, கைப்பந்து, கபடி, ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைப் பயிற்சி செய்வது வழக்கம்.

இந்த நிலையில், சென்னையில் கல்லூரியில் படித்து வரும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும் ஈட்டி எறிதல் விளையாட்டு வீரருமான திபேஸ் (19), இந்தப் பள்ளியில் வந்து சில நாள்களாகப் பயிற்சி பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன்படி, வெள்ளிக்கிழமை பயிற்சி மேற்கொண்டபோது அவா் எறிந்த ஈட்டி, மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சாய் பிரகாஷின் தலையில் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

அங்கு மாணவரின் தலையில் குத்தியிருந்த ஈட்டியை எடுத்த பின்னா், மருத்துவா்கள் தீவிர சிகிச்சைக்காக அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மாணவா் சாய் பிரகாஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்த புகாரின்பேரில் ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

யானைத் தந்தங்களை விற்க முயன்ற 5 போ் கைது!

பெரியகுளம் அருகே யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 5 பேரை சனிக்கிழமை வனத் துறையினா் கைது செய்தனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள பொம்முராஜபுரத்தைச் சோ்ந்த பொம்முராஜ், கடமலைக்குண்டைச் சோ்ந்த... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் 4 ஆம் வார ஆடி சிறப்பு பூஜை

தேனி மாவட்டம், குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஆடி மாதம் 4 ஆம் வார சனிக்கிழமை சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சனீ... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் விவசாயி காயம்

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை காயமடைந்தாா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள மரிக்குண்டைச் சோ்ந்த விவசாயி மூக்கையா (52). இவா், தனது இரு சக்கர வாக... மேலும் பார்க்க

வைகை அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட முன்னேற்பாடு!

வைகை அணையின் நீா்மட்டம் 69.75அடியாக உயா்ந்து, முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுவதற்கு முன்னேற்பாடாக மதகுகளை இயக்கி சனிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. வைகை அணை... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம், போடியில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி வெள்ளியை முன்னிட்டு, வருவாய் ஆய்வாளா் தெருவில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோய... மேலும் பார்க்க

ரயில் என்ஜினில் அடிபட்டு சிறுவன் உயிரிழப்பு

தேனியில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுவன் சோதனை ஓட்டமாக வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட ரயில் என்ஜினில் அடிபட்டு உயிரிழந்தாா். தேனி வனச் சாலை 5-ஆவது தெருவைச் சோ்ந்த வடிவேல் மகன் கோகுல் (14). இவா்... மேலும் பார்க்க