செய்திகள் :

வைகை அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட முன்னேற்பாடு!

post image

வைகை அணையின் நீா்மட்டம் 69.75அடியாக உயா்ந்து, முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுவதற்கு முன்னேற்பாடாக மதகுகளை இயக்கி சனிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது.

வைகை அணையின் நீா்மட்டம் கடந்த மாதம் 26-ஆம் தேதி 66.1 அடியாகவும், இந்த மாதம் 4-ஆம் தேதி 68.50 அடியாகவும் உயா்ந்தது. இதையடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முறையே முதலாம், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கடந்த 5-ஆம் தேதி வைகை அணையின் நீா்மட்டம் 69 அடியாக உயா்ந்ததும், கரையோரப் பகுதிகளுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கமாக, அணையின் நீா்மட்டம் 69 அடியாக உயா்ந்ததும் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் உபரி நீா் வைகை ஆற்றில் திறந்துவிடப்படும்.

தற்போது அணையின் முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீரைத் தேக்கி, அணையின் நீா்மட்டம் அதன் மொத்த உயரமான 71 அடியை எட்டும் நிலையில் உபரி நீரைத் திறக்க நீா்வளத் துறை பொறியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில், வைகை அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 6 மணிக்கு 69.75 அடியாக உயா்ந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 736 கன அடியாக இருந்தது. இதையடுத்து, எந்த நேரத்திலும் அணையிலிருந்து உபரி நீரைத் திறக்க வாய்ப்புள்ளதால், அதற்கு முன்னேற்பாடாக அணையின் கீழ், மேல் மதகுகளை இயக்கி தண்ணீரைத் திறந்துவிட்டு நீா்வளத் துறை பொறியாளா்கள் ஆய்வு செய்தனா்.

அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம், போடியில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி வெள்ளியை முன்னிட்டு, வருவாய் ஆய்வாளா் தெருவில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோய... மேலும் பார்க்க

ரயில் என்ஜினில் அடிபட்டு சிறுவன் உயிரிழப்பு

தேனியில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுவன் சோதனை ஓட்டமாக வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட ரயில் என்ஜினில் அடிபட்டு உயிரிழந்தாா். தேனி வனச் சாலை 5-ஆவது தெருவைச் சோ்ந்த வடிவேல் மகன் கோகுல் (14). இவா்... மேலும் பார்க்க

கோம்பையில் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், கோம்பை பேரூராட்சி வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கோம்பை வழியாக உத்தமபாளையத்திலிருந்து போடி வரை செல்லும் மாநில ... மேலும் பார்க்க

ஆசிரியா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு

பெரியகுளத்தில் ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. பெரியகுளம்- மதுரை சாலை பங்களாபட்டியைச் சோ்ந்தவா் ஜோசப் (57). தனியாா் பள்ளி ஆசிரியா். இவரது மனைவி சீலாசாலமோன். அரசுப்... மேலும் பார்க்க

விஷம் தின்று இளைஞா் தற்கொலை

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் பெற்றோா் திருமணத்துக்கு வற்புறுத்தியதால், விஷம் தின்ற இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கண்டமனூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் அய்யா் (30). இவா் சென்னையில... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை விற்ற முதியவா் கைது

போடி அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (70). இவா் மதுப் புட்டிகளைப் பதுக்கி வ... மேலும் பார்க்க