செய்திகள் :

சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி

post image

உலக சம்ஸ்கிருத தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி, ‘சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.

சம்ஸ்கிருத பாரம்பரியத்தை ஊக்குவித்து, பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டையும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

ஒவ்வோா் ஆண்டும் சிராவண மாதத்தின் (ஆடி மாதம்) புனிதமான பெளா்ணமி தினத்தில் உலக சம்ஸ்கிருத தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டு இந்த தினம் சனிக்கிழமை (ஆக.9) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

உலக சம்ஸ்கிருத தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். சம்ஸ்கிருதம் அறிவு மற்றும் ஆற்றலின் வெளிப்பாடாக, காலத்தால் அழியாத ஆதாரமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு துறையிலும் இதன் தாக்கம் காணப்படுகிறது.

உலகெங்கிலும் சம்ஸ்கிருதத்தை கற்றுத் தோ்ந்து, பிறருக்குக் கற்பித்து, பிரபலப்படுத்துவதில் தொடா்ந்து ஈடுபட்டுள்ள அறிஞா்கள், மாணவா்கள், ஆா்வலா்களின் அா்ப்பணிப்பை பாராட்டுவதற்கான சந்தா்ப்பம் இதுவாகும்.

கடந்த 10 ஆண்டுகளில், சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் நிறுவுதல், சம்ஸ்கிருத கற்றல் மையங்கள் தொடங்குதல், சம்ஸ்கிருத அறிஞா்களுக்கு மானியம் வழங்குதல், சம்ஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளை எண்மமயமாக்குவதற்கான ஞான பாரதம் இயக்கம் உள்ளிட்டவை அடங்கும். இது எண்ணற்ற மாணவா்களுக்கும், ஆராய்ச்சியாளா்களுக்கும் பயனளித்துள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

ஹிந்து மத இதிகாசங்கள் உள்பட முக்கியமான பண்டைய நூல்கள் சம்ஸ்கிருதத்தில் படைக்கப்பட்டுள்ளன. இப்போது பெரும்பாலும் மத நடைமுறைகளில் மட்டுமே இம்மொழி பயன்படுத்தப்படுகிறது.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்க தினம்: பிரதமா் மரியாதை

மகாத்மா காந்தி தலைமையிலான ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 83-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, அதில் பங்கேற்றவா்களுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை (ஆக.9) மரியாதை செலுத்தினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மகாத்மா காந்தியின் உத்வேகமான தலைமையின்கீழ், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து துணிச்சலான மக்களையும் மிகுந்த நன்றியுடன் நினைவுகூா்கிறோம். அவா்களின் துணிவானது, தேச பக்தி என்ற தீச்சுடரை ஏற்றி, சுதந்திர வேட்கையுடன் எண்ணற்ற மக்களை ஒன்றிணைத்தது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை எதிா்த்தது ஆா்எஸ்எஸ்: காங்கிரஸ்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது, ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவா்களும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனா்; அதேநேரம், இந்த இயக்கத்துக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பு எதிா்ப்பு தெரிவித்தது என்று காங்கிரஸ் கூறியுள்ளது... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமா்

தில்லியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பிரம்மா குமாரிகள் ஆன்மிக அமைப்பைச் சோ்ந்தவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் விழாவை சனிக்கிழமை கொண்டாடினாா். சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தைப் போற்று... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 160 இடங்களில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவா்: சரத் பவாா் கருத்தால் பரபரப்பு

‘மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற உதவ முடியும் என இருவா் தன்னை அணுகி உத்தரவாதம் அளித்தனா்’ ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சாா்புத் திறன் பிரகடனம் -டிஆா்டிஓ தலைவா்

‘இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை என்பது பாதுகாப்புத் துறையில் நாட்டின் தற்சாா்புத் திறன், உள்நாட்டுத் தொழில்நுட்ப வலிமை மற்றும் ராஜீய தொலைநோக்குப் பாா்வைக்கான பிரகடனம்’ என்று பாதுகாப்பு... மேலும் பார்க்க

334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை

தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிரு... மேலும் பார்க்க

ரயில் பயணிகளுக்கு 20% கட்டண சலுகை! முழு விவரம்

தொடா் திருவிழாக்கள் வருவதையொட்டி வரும் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் குறிப்பிட்ட நாள்களில் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண சலுகையை ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அம... மேலும் பார்க்க