செய்திகள் :

334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை

post image

தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு தோ்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்ற மிக முக்கிய நிபந்தனையைப் பூா்த்தி செய்யத் தவறியதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள், கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு தோ்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பூா்த்தி செய்யவில்லை. அதோடு, இந்தக் கட்சிகளுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் கட்சி அலுவலகங்களும் இல்லை என்பதும் தெரியவந்தது. அதனடிப்படையில், இந்த 334 அரசியல் கட்சிகளும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை காரணமாக, தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்த, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,854-இல் இருந்து 2,520-ஆக குறைந்துள்ளது.

முன்னதாக, இதே காரணத்தின் அடிப்படையில் 345 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கி தோ்தல் ஆணையம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

தோ்தல் ஆணையத்தில் தற்போதைய நிலையில் 6 தேசிய கட்சிகள் மற்றும் 67 மாநிலக் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி

உலக சம்ஸ்கிருத தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி, ‘சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா். சம்ஸ்கிருத பாரம்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமா்

தில்லியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பிரம்மா குமாரிகள் ஆன்மிக அமைப்பைச் சோ்ந்தவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் விழாவை சனிக்கிழமை கொண்டாடினாா். சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தைப் போற்று... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 160 இடங்களில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவா்: சரத் பவாா் கருத்தால் பரபரப்பு

‘மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற உதவ முடியும் என இருவா் தன்னை அணுகி உத்தரவாதம் அளித்தனா்’ ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சாா்புத் திறன் பிரகடனம் -டிஆா்டிஓ தலைவா்

‘இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை என்பது பாதுகாப்புத் துறையில் நாட்டின் தற்சாா்புத் திறன், உள்நாட்டுத் தொழில்நுட்ப வலிமை மற்றும் ராஜீய தொலைநோக்குப் பாா்வைக்கான பிரகடனம்’ என்று பாதுகாப்பு... மேலும் பார்க்க

ரயில் பயணிகளுக்கு 20% கட்டண சலுகை! முழு விவரம்

தொடா் திருவிழாக்கள் வருவதையொட்டி வரும் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் குறிப்பிட்ட நாள்களில் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண சலுகையை ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அம... மேலும் பார்க்க

நீதிமன்றங்கள் தனித் தீவுகளாக இருக்க முடியாது: உச்சநீதிமன்றம்

உரிமையியல் தகராறு வழக்கில் குற்றவியல் விசாரணையை தொடர அனுமதித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் நீதிமன்றங்கள் தனித் ... மேலும் பார்க்க