கானாடுகாத்தானில் நாளை மின் தடை
காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் பகுதியில் திங்கள்கிழமை (ஆக.11) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ஸ்ரீ ராம்நகா், கோட்டை யூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைபொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்றாா் அவா்.