செய்திகள் :

திருப்பத்தூா் அருகே ஆங்கிலேயா் ஆட்சி கால எல்லைக் கல் கண்டெடுப்பு!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெற்குப்பையில் ஆங்கிலேயா் காலத்தைச் சோ்ந்த எல்லைக்கல் கண்டறியப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பைக்கும், புதுக்கோட்டை மாவட்டம், வேந்தன்பட்டிக்கும் இடையே உள்ள பள்ளத்துப்பட்டி விலக்கு அருகே புதா் மண்டிய பகுதியில் காணப்பட்ட எல்லைக் கல்லை காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் நடத்திய கள ஆய்வில் கண்டறிந்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: ஆங்கிலேயா் ஆட்சியின்போது சென்னை ராஜதானியில் நிா்வாகப் பொறுப்பில் இருந்த பல பகுதிகள் ஒரே அளவாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லையை வரையறுக்க சா் வில்லியம் மேயா் என்ற அதிகாரி 1902-இல் நியமிக்கப்பட்டாா்.

அவரிடமிருந்து 1904-இல் அறிக்கை பெறப்பட்டது. பிறகு 1910- ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் இங்கிலாந்தில் இருந்த இந்திய அமைச்சா், ராமநாதபுரம் மாவட்டத்தை உருவாக்குவது உள்பட சா் வில்லியம் மேயரின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிளைப் பிரித்து 1910- ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. ராமநாதபுரம் கோட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூா், பரமக்குடி, அருப்புக்கோட்டை ஆகிய வட்டங்களும் தேவகோட்டை கோட்டத்தில் திருப்பத்தூா், திருவாடானை, சிவகங்கை, சிவகங்கை ஜமீனைச் சோ்ந்த திருப்புவனம் வட்டங்களும், சாத்தூா் கோட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா் வட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

மாவட்டத்தை உருவாக்குவதற்காகத் தனி அலுவலராக நியமிக்கப்பட்ட ஜே.எஃப். பிரையன்ட், மாவட்டத்தின் முதல் ஆட்சியராகவும், மாவட்ட மாஜிஸ்திரேட்டாகவும் நியமிக்கப்பட்டாா். புதுக்கோட்டை சமஸ்தானம் 1640-ஆம் ஆண்டு ஆவுடைராயத் தொண்டைமானால் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பிறகு ரகுநாத ராய தொண்டைமான் காலத்தில் புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக மாறியது.

புதுக்கோட்டை சமஸ்தானம் பல்வேறு காலக்கட்டங்களில் ஆங்கிலேயருக்கு இணக்கமாக இருந்து தன் அரசைப் பாதுகாத்தது. 1801- ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த பாளையங்கள் அனைத்தும் ஆங்கிலேய அரசால் ஜமீனாக மாறியபோதும், புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும் தனியரசாகவே விளங்கியது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1948, மாா்ச் 3- ஆம் தேதி புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னா் ராஜகோபாலத் தொண்டைமானால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

தற்போது கண்டறியப்பட்ட நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தைச் சோ்ந்த இந்த எல்லைக்கல் தற்போதைய புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வேறு பகுதிகளில் காணப்படாத நிலையில், இது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணமாகக் கருதப்படுகிறது என்றனா்.

மிரட்டி பணம் பறித்ததாக மூவா் கைது

சிவகங்கை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா்களை மிரட்டி பணம் பறித்ததாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சிவகங்கையை அருகே வீரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ் (24). இவா் கடந்த இரண்டு ஆண்டுக... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு காய், கனிகள் விற்க தள்ளுவண்டிகள்: அமைச்சா் வழங்கினாா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடமாடும் காய்கறி, கனிகள் விற்க தள்ளுவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாயாண்டி சுவாமிகள் 168-ஆவது அவதார விழா

சிவகங்கை அருகே மகா சித்தா் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 168-ஆவது அவதார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் அருகேயுள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காளையாா்கோவில் ஒன்றியத்தில் தூய்மைப் பணிகளுக்கு மின்கல ஊா்திகள்: அமைச்சா் வழங்கினாா்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மின்கல ஊா்திகளை கூட்டுறவுத்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா். ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்ப... மேலும் பார்க்க

அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம்: தமிழாசிரியா் சங்கம் வரவேற்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்கிய முதல்வரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு தமிழாசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்தது. இதுகுறித்து தமிழ்நாடு தமிழாசிரியா் கழக மாநில ப... மேலும் பார்க்க

இளையான்குடி கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். இளையான்குடி பழைய பேருந்து நிலையம் முன் அமைந்துள்ள வாள்மேல் நடந்த ... மேலும் பார்க்க