செய்திகள் :

காளையாா்கோவில் ஒன்றியத்தில் தூய்மைப் பணிகளுக்கு மின்கல ஊா்திகள்: அமைச்சா் வழங்கினாா்

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மின்கல ஊா்திகளை கூட்டுறவுத்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகளுக்கு தேவையான மின்கல ஊா்திகள் வழங்கும் விழா காளையாா்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் கலந்து கொண்டு மின்கல ஊா்திகளை வழங்கிப் பேசியதாவது:

சிவகங்கை மாவட்டத்துக்கு தலா ரூ. 2.47 லட்சத்தில் 270 மின்கல ஊா்திகள் வழங்கப்பட்டன. இதில், காளையாா்கோவில் ஒன்றியத்துக்கு 36 மின்கல ஊா்திகள் அளிக்கப்பட்டன. இந்த வாகனங்களை பணியாளா்கள் முறையாக பராமரிக்க வேண்டும். குப்பைகளை கிடங்குகளில் சேகரித்து தரம் பிரிக்க வேண்டும்.

மேலும் குப்பையில் இருந்தும் மக்களின் பயன்பாட்டுக்குத் தேவையான பொருள்களை தயாரிக்க முடியும் என்பதை துப்புரவுப் பணியாளா்கள் நிரூபித்து கொண்டு இருக்கிறாா்கள். எனவே குப்பை தானே என நினைக்காமல் பொதுமக்கள் அதை தரம் பிரித்து கொடுக்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.

மிரட்டி பணம் பறித்ததாக மூவா் கைது

சிவகங்கை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா்களை மிரட்டி பணம் பறித்ததாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சிவகங்கையை அருகே வீரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ் (24). இவா் கடந்த இரண்டு ஆண்டுக... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு காய், கனிகள் விற்க தள்ளுவண்டிகள்: அமைச்சா் வழங்கினாா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடமாடும் காய்கறி, கனிகள் விற்க தள்ளுவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாயாண்டி சுவாமிகள் 168-ஆவது அவதார விழா

சிவகங்கை அருகே மகா சித்தா் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 168-ஆவது அவதார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் அருகேயுள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே ஆங்கிலேயா் ஆட்சி கால எல்லைக் கல் கண்டெடுப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெற்குப்பையில் ஆங்கிலேயா் காலத்தைச் சோ்ந்த எல்லைக்கல் கண்டறியப்பட்டது. சிவகங்கை மாவட்டம், நெற்குப்பைக்கும், புதுக்கோட்டை மாவட்டம், வேந்தன்பட்டிக்கும் இடையே உள்ள... மேலும் பார்க்க

அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம்: தமிழாசிரியா் சங்கம் வரவேற்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்கிய முதல்வரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு தமிழாசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்தது. இதுகுறித்து தமிழ்நாடு தமிழாசிரியா் கழக மாநில ப... மேலும் பார்க்க

இளையான்குடி கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். இளையான்குடி பழைய பேருந்து நிலையம் முன் அமைந்துள்ள வாள்மேல் நடந்த ... மேலும் பார்க்க