செய்திகள் :

டிரம்ப் - புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை..! - உக்ரைன் மக்கள் கருத்து!

post image

டிரம்ப் - புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை என்று உக்ரைன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆக. 15-ஆம் தேதி அலாஸ்காவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து பேசுகிறார். உக்ரைன் விவகாரத்தில் நல்லதொரு முடிவை எட்ட இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மத்திய அரசு சனிக்கிழமை(ஆக. 9) வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை குறித்து உக்ரைன் மக்கள் தெரிவித்துள்ள கருத்துகளைப் பார்க்கலாம்:

“அங்கே அவர்கள் ஏதோ பேசிக்கொள்ளட்டும், இங்கே மக்கள் செத்துமடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாயிருந்தால் அல்ல ஒப்பந்தம் எட்ட விருப்பமிருந்தால் அதை அவர்கள் எப்போதோ செய்திருக்கலாம். அதைச் செய்யவில்லை”.

“இந்த சந்திப்பு வெறும் காட்சிப்போக்குக்காக மட்டுமே”

“புதினின் மரித்த உடல் எடுத்துச் செல்லப்படும் வரை நாங்கள் காத்திருப்போம். ஒருவேளை அதன்பின்னராவது நிலைமை மாறலாம்” ஆகிய கருத்துகள் உக்ரைனில் பரவலாக எழுந்துள்ளன.

நிலத்தை விட்டுத் தர மாட்டோம் -உக்ரைன் அதிபா்

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விடுத்தர ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். உக்ரைன் போா் நிறுத்தம் தொடா... மேலும் பார்க்க

5 மாதங்களுக்குப்பின்... விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவிட்டு 4 விண்வெளி வீரர்களுடன் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன டிராகன் விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது.அன்னேமெக்க்ளெய்ன், நிகோல் அயெர்ஸ், டாகுயா ஆன... மேலும் பார்க்க

லெபனானில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து: 6 ராணுவ நிபுணர்கள் பலி

தெற்கு லெபனானில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்தில் 6 ராணுவ நிபுணர்கள் பலியாகினர். தெற்கு லெபனானில் உள்ள ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிபொருள்கள் சனிக்கிழமை வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் 6 ராணுவ நிபுண... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் ஒரு விமானம்கூட சுட்டு வீழ்த்தப்படவில்லை! ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இந்தியா - பாக். இடையே சொற்போர்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று விமானப்படை தலைமைத் தளபதி மார்ஷல் ஏ. பி. சிங் சனிக்கிழமை(ஆக. 9) தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து, இந்தியாவுக்கு பத... மேலும் பார்க்க

டிரம்ப்பின் 50% வரி விதிப்பால் இந்தியா, ரஷியா, சீனா கைகோக்கும்! ஜான் போல்டன் எச்சரிக்கை

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்து உத்தரவிட்டிருப்பதால் ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கமாகும் என்றும் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்றும் முன்னாள் அமெரிக்க தேசிய ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் 300 கி.மீ. தொலைவிலிருந்து பாக். போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது! -விமானப்படை தளபதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று விமானப்படை தலைமை தளபதி மார்ஷல் ஏ. பி. சிங் சனிக்கிழமை(ஆக. 9) தெரிவித்தார். அவற்றுள் பாகிஸ்தான் விமானப்படையின்... மேலும் பார்க்க