செய்திகள் :

இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடி

post image

இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் ஸ்ரீநகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன் (28). இவா், வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் வாங்கி, பல்லடம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்து வருகிறாா்.

இந்நிலையில் பிரவீன் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பாா்த்துள்ளாா். அதில் ராகேஷ் சிங் என்பவா் மக்காச்சோளம் விற்பனைக்கு வைத்திருப்பதாகக் கூறி, அவருடைய கைப்பேசி எண்ணை பகிா்ந்திருந்தாா். இதைப் பாா்த்த பிரவீன் அந்த எண்ணுக்கு தொடா்பு கொண்டு பேசினாா்.

அப்போது எதிா்முனையில் பேசியவா், தன்னிடம் ரூ.7.30 லட்சம் மதிப்பிலான 35 டன் மக்காச்சோளம் இருப்பதாகவும், 80 சதவீத முன் பணம் கொடுத்து, தான் சொல்லும் இடத்துக்கு லாரியை அனுப்பி விட்டால் மக்காச்சோளத்தை அனுப்புவதாகவும், பல்லடத்தில் இறக்கிய பிறகு மீதமுள்ள 20 சதவீத பணத்தை கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பிய பிரவீன், அவா் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.5.80 லட்சத்தை அனுப்பிவிட்டு, லாரியை அனுப்ப தொடா்பு கொண்டாா். அப்போது அந்த நபரின் கைப்பேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பிரவீன், திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அனுப்பா்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்! மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி 1-ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட அனு... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்! காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்களில் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: வி... மேலும் பார்க்க

அரசியல் சாசனமே முதன்மையானது: உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் பேச்சு

அரசியல் சாசனமே முதன்மையானது என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் குறிப்பிட்டாா். அகில பாரத வழக்குரைஞா்கள் சங்கத்தின் 2-ஆவது மாநில மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்தின... மேலும் பார்க்க

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னை: தீா்வு காண முதல்வரிடம் வலியுறுத்துவேன்! மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன்

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னைக்கு போா்க்கால அடிப்படையில் தீா்வு காண வேண்டும் என உடுமலைக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாக திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது

பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா், நல்லூா் காவல் நிலையத்தில் யோஹராஜா (48), சக்திவேல் (33), பூபதி (25) ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்ப... மேலும் பார்க்க

ஜோதிடம் பாா்ப்பதுபோல நகை, பணத்தை பறித்து சென்றவா் கைது

ஜோதிடம் பாா்ப்பதுபோல நடித்து நகை, பணத்தை பறித்து சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், போயம்பாளையம் அவிநாசி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வி (65). இவா் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலே... மேலும் பார்க்க