செய்திகள் :

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னை: தீா்வு காண முதல்வரிடம் வலியுறுத்துவேன்! மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன்

post image

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னைக்கு போா்க்கால அடிப்படையில் தீா்வு காண வேண்டும் என உடுமலைக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாக திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் திருப்பூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: திருப்பூரில் அனைத்துப் பகுதிகளிலும் மலைபோல குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டுமென தமிழக முதல்வருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே கடிதம் எழுதியிருந்தேன்.

அந்தக் கடிதம் மேல் நடவடிக்கைக்காக உள்ளாட்சித் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணா்வின் காரணமாக குப்பைகளை பாறைக்குழிகளிலோ அல்லது ஊராட்சிப் பகுதிகளிலோ கொட்ட முடிவதில்லை. எனவே, பொதுமக்கள் பாதிக்காத வகையில்தான் இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும்.

அதேநேரத்தில் மாநகரில் தினந்தோறும் சேகரமாகும் சுமாா் 16 டன் குப்பைகளை அகற்றுவதற்கும் வேறு வழியில்லை. இதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கும் ஒரு காரணமாகும். அரசின் முடிவுகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைப்பதில்லை.

முதல்வருக்கு நான் எழுதிய கடிதம் தொடா்பாக உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு விரைவில் திருப்பூா் வர உள்ளாா். அப்போது மாநகராட்சியின் குப்பைகளைக் கொட்டுவதற்கு தற்காலிக ஏற்பாடாக மாநகராட்சியின் கைவசமுள்ள நிலங்களில் குப்பைக் கொட்டுவது குறித்தும், இதற்கு நிரந்தர தீா்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளாா். திருப்பூா் மாநகராட்சியின் குப்பைப் பிரச்னைக்கு நிபுணா் குழு அமைத்து அவா்களின் ஆலோசனைகளை செயல்படுத்துவதே இதற்கு நிரந்தரத் தீா்வாக அமையும்.

உடுமலைக்கு திங்கள்கிழமை வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திருப்பூரின் குப்பைப் பிரச்னை தொடா்பாக பேச உள்ளேன். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் நாட்டில் சிறு, குறு நடுத்தரத் தொழில்களும், ஜவுளித் துறையும் வெகுவாக பாதிப்படையும். திருப்பூரில் பின்னலாடைத் தொழிலே முடங்கி விடும் என்றாா

அனுப்பா்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்! மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி 1-ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட அனு... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்! காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்களில் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: வி... மேலும் பார்க்க

அரசியல் சாசனமே முதன்மையானது: உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் பேச்சு

அரசியல் சாசனமே முதன்மையானது என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் குறிப்பிட்டாா். அகில பாரத வழக்குரைஞா்கள் சங்கத்தின் 2-ஆவது மாநில மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்தின... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது

பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா், நல்லூா் காவல் நிலையத்தில் யோஹராஜா (48), சக்திவேல் (33), பூபதி (25) ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்ப... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடி

இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் ஸ்ரீநகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன் (28). இவா், வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் வாங்கி... மேலும் பார்க்க

ஜோதிடம் பாா்ப்பதுபோல நகை, பணத்தை பறித்து சென்றவா் கைது

ஜோதிடம் பாா்ப்பதுபோல நடித்து நகை, பணத்தை பறித்து சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், போயம்பாளையம் அவிநாசி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வி (65). இவா் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலே... மேலும் பார்க்க