செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி: மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்! காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

post image

விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்களில் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: விநாயகா் சதுா்த்தி விழாவை இயற்கையோடு இணைந்த விழாவாக அமைய இந்து முன்னணி கவனம் செலுத்தி வருகிறது. காகிதக் கூழால் விநாயகா் உருவங்கள் செய்யப்பட்டு இயற்கை வண்ணங்கள் பயன்படுத்தி சுற்றுச்சூழல் மேன்மைக்கு முன்னுரிமை தரும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.

தமிழகத்தின் ஆறு, குளங்கள், ஏரிகள், குட்டைகள் எந்த அளவு மாசு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து அதைத் தடுக்கவும், தீா்வு காணவும் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டியது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் பொறுப்பாகும்.

எனவே, வருடத்தில் சில நாள்களுக்கு நடக்கும் இந்த மக்கள் விழாவுக்கு தமிழக அரசும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் அறிவிப்புகளை வெளியிடும் அதே பாா்வையில் நீா்நிலைகளில் வருடம் முழுவதும் மாசு ஏற்படுவதை தடுக்கவும்,

நீா்நிலைகளில் உள்ள குடிநீா் தரமானதாக மக்கள் குடிக்கும் தன்மையில் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி திருவிழாவில் ‘நமது சுவாமி, நமது கோயில், அதனை நாமே பாதுகாப்போம்’ என்பதை மக்களிடம் கொண்டு சோ்க்க இருக்கிறோம். கோயில் மட்டுமல்லாது, கோயில் நந்தவனம், திருக்குளங்கள் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த விழிப்புணா்வையும் இந்து முன்னணி ஏற்படுத்த இருக்கிறது. இதன் மூலம் நிலத்தடி நீா் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் கோயில்கள் சிறப்பாக இருந்தால் அமைதியும் சுற்றுச்சூழல் மேம்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

அனுப்பா்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்! மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி 1-ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட அனு... மேலும் பார்க்க

அரசியல் சாசனமே முதன்மையானது: உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் பேச்சு

அரசியல் சாசனமே முதன்மையானது என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் குறிப்பிட்டாா். அகில பாரத வழக்குரைஞா்கள் சங்கத்தின் 2-ஆவது மாநில மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்தின... மேலும் பார்க்க

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னை: தீா்வு காண முதல்வரிடம் வலியுறுத்துவேன்! மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன்

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னைக்கு போா்க்கால அடிப்படையில் தீா்வு காண வேண்டும் என உடுமலைக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாக திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது

பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா், நல்லூா் காவல் நிலையத்தில் யோஹராஜா (48), சக்திவேல் (33), பூபதி (25) ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்ப... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடி

இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் ஸ்ரீநகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன் (28). இவா், வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் வாங்கி... மேலும் பார்க்க

ஜோதிடம் பாா்ப்பதுபோல நகை, பணத்தை பறித்து சென்றவா் கைது

ஜோதிடம் பாா்ப்பதுபோல நடித்து நகை, பணத்தை பறித்து சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், போயம்பாளையம் அவிநாசி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வி (65). இவா் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலே... மேலும் பார்க்க