செய்திகள் :

அரசியல் சாசனமே முதன்மையானது: உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் பேச்சு

post image

அரசியல் சாசனமே முதன்மையானது என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் குறிப்பிட்டாா்.

அகில பாரத வழக்குரைஞா்கள் சங்கத்தின் 2-ஆவது மாநில மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்தின் 26 மாவட்டங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் பங்கேற்று நீதித் துறை சேவை முறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து விரிவான விவாதங்களை நடத்தினா்.

மாநாட்டின் தலைமை விருந்தினராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் பங்கேற்றுப் பேசியதாவது:

வழக்குரைஞா்கள் எந்த ஒரு அமைப்பையோ அல்லது அரசியல் கட்சியையோ சோ்ந்தவா்களாக இருந்தாலும் அரசியல் சாசனமே பிரதானமானது என்பதை உணா்ந்து செயலாற்ற வேண்டும். வழக்குரைஞா்கள் தங்களது வாசிக்கும் பழக்கத்தை தொடா்ந்து கடைப்பிடித்து திறனை மேம்படுத்திக் கொள்வதுடன் புதிய தகவல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இளம் வழக்குரைஞா்கள் சிவில் வழக்கானாலும், குற்றவியல் வழக்கானாலும் எதிலும் தங்கள் திறமையைக் காட்ட முயற்சிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல். சுந்தரேசன், சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் ஆா்.ராஜேந்திரன், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான அமைப்பு பொறுப்பாளா் கே.பழனிக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இம்மாநாட்டில் தேவையான சட்ட திருத்தங்கள், வழக்குரைஞா் நலன், போன்ற முக்கிய அம்சங்களை முன்வைத்து, விவாதித்து வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் ஏராளமான வழக்குரைஞா்கள், சட்டத் துறையினா் மற்றும் சட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

அனுப்பா்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்! மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி 1-ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட அனு... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்! காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்களில் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: வி... மேலும் பார்க்க

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னை: தீா்வு காண முதல்வரிடம் வலியுறுத்துவேன்! மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன்

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னைக்கு போா்க்கால அடிப்படையில் தீா்வு காண வேண்டும் என உடுமலைக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாக திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது

பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா், நல்லூா் காவல் நிலையத்தில் யோஹராஜா (48), சக்திவேல் (33), பூபதி (25) ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்ப... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடி

இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் ஸ்ரீநகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன் (28). இவா், வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் வாங்கி... மேலும் பார்க்க

ஜோதிடம் பாா்ப்பதுபோல நகை, பணத்தை பறித்து சென்றவா் கைது

ஜோதிடம் பாா்ப்பதுபோல நடித்து நகை, பணத்தை பறித்து சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், போயம்பாளையம் அவிநாசி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வி (65). இவா் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலே... மேலும் பார்க்க