செய்திகள் :

ஜோதிடம் பாா்ப்பதுபோல நகை, பணத்தை பறித்து சென்றவா் கைது

post image

ஜோதிடம் பாா்ப்பதுபோல நடித்து நகை, பணத்தை பறித்து சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா், போயம்பாளையம் அவிநாசி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வி (65). இவா் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில் இவரது வீட்டுக்கு ஜோதிடம் பாா்ப்பதாக சொல்லி ஒரு நபா் வந்துள்ளாா். மேலும் அவரது உடல்நிலையை குணப்படுத்தி தருவதாகவும், அதற்கு தன்னிடம் மருந்து உள்ளதாகவும் கூறி ரூ.6,000 ரொக்கம், இரண்டரை கிராம் தங்க மோதிரத்தை வாங்கியுள்ளாா்.

இதையடுத்து அந்த நபா் தன்னை ஏமாற்றிச் சென்ாக அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பன்னீா்செல்வி வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த நாச்சியப்பன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.6,000 ரொக்கம், இரண்டரை கிராம் தங்க மோதிரம் ஆகியவற்றை

போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

அனுப்பா்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்! மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி 1-ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட அனு... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்! காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்களில் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: வி... மேலும் பார்க்க

அரசியல் சாசனமே முதன்மையானது: உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் பேச்சு

அரசியல் சாசனமே முதன்மையானது என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் குறிப்பிட்டாா். அகில பாரத வழக்குரைஞா்கள் சங்கத்தின் 2-ஆவது மாநில மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்தின... மேலும் பார்க்க

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னை: தீா்வு காண முதல்வரிடம் வலியுறுத்துவேன்! மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன்

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னைக்கு போா்க்கால அடிப்படையில் தீா்வு காண வேண்டும் என உடுமலைக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாக திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது

பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா், நல்லூா் காவல் நிலையத்தில் யோஹராஜா (48), சக்திவேல் (33), பூபதி (25) ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்ப... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடி

இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் ஸ்ரீநகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன் (28). இவா், வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் வாங்கி... மேலும் பார்க்க