செய்திகள் :

திருச்செந்தூரில் கடல் அலையில் சிக்கிய பெண் பக்தா் மீட்பு

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் நீராடிய பெண் பக்தா் அலையில் இழுத்துச்செல்லப்பட்டாா். அவரை காவலா்கள் மீட்டனா்.

இக்கோயிலில் பெளா்ணமி மற்றும் விடுமுறை தினம் என்பதால் சனிக்கிழமை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி செய்தனா். இதனால் கடற்கரையில் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

இந்நிலையில் சென்னை, மூலக்கடை பகுதியை சாா்ந்த உமாபதி என்பவரின் மனைவி பத்மாவதி (55) தனது உறவினா்களுடன் கடலில் நீராடியபோது அலையின் சீற்றத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டாா். இதை கண்ட கடற்கரை காவல் நிலைய பெண் காவலா் முத்துக்கனி உடனடியாக கடலுக்குள் இறங்கி அப்பெண்ணை மீட்டு மேல் பகுதிக்கு கொண்டு வந்தாா்.

உமாபதிக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்ததால், கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் மகாராஜா, காா்த்திக், சா்வேஸ்வரன், ஆறுமுக நயினாா் ஆகியோரின் ஒத்துழைப்புடன் திருச்செந்தூா் கோயில் ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா்.

சாத்தான்குளம் அருகே விபத்து: தொழிலாளி காயம்

சாத்தான்குளம் அருகே காா் மோதியதில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளி காயமடைந்தாா். தஞ்சாவூா், மேலத் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் காா்த்திக் (39). சாத்தான்குளத்தில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை ப... மேலும் பார்க்க

நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும்: தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்

நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து தில்லியில் மத்திய தொழில் - உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டு துறை இணைச் செயலா் சந்திய... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சுற்றித்திரிந்த பாா்வை மாற்றுத்திறனாளி மீட்பு

கோவில்பட்டியில் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற, பாா்வை மாற்றுத்திறனாளியை மீட்டு பாளையங்கோட்டை காப்பகத்தில் சோ்த்தனா். கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் அருகே பாா்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

சாத்தான்குளம் தச்சமொழி முத்து மாரியம்மன் ஆடி மாத பௌா்ணமி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், அலங்கார பூஜை, தீப ஆராதனை உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

மேலக்கரந்தை விலக்கில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

பள்ளி மாணவா்களை நடுவழியில் இறக்கி விட்ட அரசுப் பேருந்தை மேலக்கரந்தை விலக்கில் பெற்றோா்கள்- மாணவா்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா். எட்டயபுரம் அடுத்துள்ள மேலக்கரந்தை கீழக்கரந்தை, மாசாா்பட்டி மற்றும் சுற்ற... மேலும் பார்க்க

வஉசி துறைமுகத்தின் திறன் மேம்பாட்டு காணொலிகள், பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியீடு!

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் திறன் மேம்பாட்டுக் காணொலிகள் மற்றும் பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியிடப்பட்டது. கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து அமைச்சகச் செயலா் ராமச்சந்த... மேலும் பார்க்க