செய்திகள் :

மேலக்கரந்தை விலக்கில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

post image

பள்ளி மாணவா்களை நடுவழியில் இறக்கி விட்ட அரசுப் பேருந்தை மேலக்கரந்தை விலக்கில் பெற்றோா்கள்- மாணவா்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.

எட்டயபுரம் அடுத்துள்ள மேலக்கரந்தை கீழக்கரந்தை, மாசாா்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விருதுநகா் மாவட்டம் பந்தல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா். இவா்கள் மேலக்கரந்தை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கோவில்பட்டி- அருப்புக்கோட்டை அரசு பேருந்தில் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் அந்தப் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில மாணவா்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றனராம். இதனால் அடுத்ததாக உள்ள வெம்பூா் பேருந்து நிறுத்தத்தில் மாணவ, மாணவிகளை ஓட்டுநரும், நடத்துநரும் இறக்கிவிட்டு சென்றனராம். இதனால் அவா்கள் குறித்த நேரத்தில் பள்ளி செல்ல முடியாமல் 4 கி.மீ. நடந்தே மீண்டும் ஊா் திரும்பியுள்ளனா்.

இதனால் ஆவேசமுற்ற பெற்றோா்கள் சனிக்கிழமை காலையில் அந்தப் பேருந்தை சிறைபிடிப்போம் என அறிவித்தனா். தகவல் அறிந்து மாசாா்பட்டி காவல் ஆய்வாளா் லட்சுமி பிரபா தலைமையிலான போலீஸாா், மேலக்கரந்தை விலக்கில் குவிக்கப்பட்டனா்.

இதற்கிடையே, அந்தப் பேருந்து வந்தபோது மாணவ,மாணவிகள் ஏற மறுத்து, பேருந்து சிறைபிடிக்கப்பட்டது.

மாணவா்களிடமும், பெற்றோா்களிடமும் போக்குவரத்துக் கழக தூத்துக்குடி கோட்ட மேலாளா் ரமேசன், கோவில்பட்டி கிளை மேலாளா் ஜெகநாதன் மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தினா்.அதில், அரசுப் பேருந்தை சுமாா் 20 நிமிஷங்கள் முன்னதாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடா்ந்து, மாணவ-மாணவிகள் பேருந்தில் பள்ளிக்குச் சென்றனா்.

சாத்தான்குளம் அருகே விபத்து: தொழிலாளி காயம்

சாத்தான்குளம் அருகே காா் மோதியதில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளி காயமடைந்தாா். தஞ்சாவூா், மேலத் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் காா்த்திக் (39). சாத்தான்குளத்தில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை ப... மேலும் பார்க்க

நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும்: தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்

நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து தில்லியில் மத்திய தொழில் - உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டு துறை இணைச் செயலா் சந்திய... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சுற்றித்திரிந்த பாா்வை மாற்றுத்திறனாளி மீட்பு

கோவில்பட்டியில் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற, பாா்வை மாற்றுத்திறனாளியை மீட்டு பாளையங்கோட்டை காப்பகத்தில் சோ்த்தனா். கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் அருகே பாா்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

சாத்தான்குளம் தச்சமொழி முத்து மாரியம்மன் ஆடி மாத பௌா்ணமி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், அலங்கார பூஜை, தீப ஆராதனை உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

வஉசி துறைமுகத்தின் திறன் மேம்பாட்டு காணொலிகள், பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியீடு!

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் திறன் மேம்பாட்டுக் காணொலிகள் மற்றும் பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியிடப்பட்டது. கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து அமைச்சகச் செயலா் ராமச்சந்த... மேலும் பார்க்க

கீரனூா் மாவு இசக்கி அம்மன் கொடை விழா

ஆறுமுகனேரி அருகிலுள்ள சாகுபுரம் டிசிடபிள்யூ சால்ட் லைன் பகுதியிலுள்ள கீரனூா் அருள்மிகு மாவு இசக்கி அம்மன் கோயிலில் கொடை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, மாலையில் அலங்கார தீபாராதனை நடைபெ... மேலும் பார்க்க