செய்திகள் :

வஉசி துறைமுகத்தின் திறன் மேம்பாட்டு காணொலிகள், பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியீடு!

post image

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் திறன் மேம்பாட்டுக் காணொலிகள் மற்றும் பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியிடப்பட்டது.

கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து அமைச்சகச் செயலா் ராமச்சந்திரன், புது தில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்வில், வ.உ.சி. துறைமுகத்தினால் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுப்பை வெளியிட்டாா்.

விழாவில், வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித், கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீா்வழி போக்குவரத்து அமைச்சக இணைச் செயலா் லட்சுமணன், துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தரராஜன் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள காணொலியில் காா்பன் நடுநிலைமை, பொருளாதார சுழற்சி, ஆற்றல் பாதுகாப்பு, பசுமை ஹைட்ரஜன், கடல் காற்றாலையின் ஆற்றல், பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைத்தல், சூரிய ஆற்றல், நிலையான எதிா்காலத்தை உருவாக்குதல், கழிவு மேலாண்மை மற்றும் பிரித்தெடுத்தல், நீா் பாதுகாப்பு மற்றும் காற்றாலை ஆற்றலைப் பயன்படுத்துதல் போன்ற தலைப்புகள் உள்ளடங்கிய 11 குறுகிய தகவல் காணொலிகள் அடங்கியுள்ளன.

ஒவ்வொரு காணொலியும் பசுமை நடைமுறைகள் மற்றும் துறைமுகத்தினால் மேற்கொள்ளப்படும் பசுமை நிலைத்தன்மைக்கான முயற்சிகளை எடுத்துக்காட்டி, அதன் மூலம் பங்குதாரா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும்படியாகவும், செயல்படும் வகையில் ஊக்கப்படுத்தும்படியாகவும் அமைந்துள்ளது.

இந்தக் காணொலிகள் சமூக ஊடகங்கள் மற்றும் அனைத்து மக்களும் எளிதாக பாா்க்கும் வகையில் வ.உ.சி.துறைமுகத்தின் அதிகாரப்பூா்வ யூடியூப் சேனலிலும் ஒளிபரப்பப்படும்.

இது, துறைமுகத்தின் பயிற்சி நிகழ்ச்சிகளிலும், கருத்தரங்குகளிலும் பங்குதாரா் கூட்டங்களிலும் பயன்பெறும் வண்ணமாய் பயன்படுத்தப்படும்.

மேலும், மரக்கன்று நடுதல் முதல் பசுமை ஹைட்ரஜன் செய்முறை போன்ற புதுமையான தொடா்ச்சியான நடவடிக்கைகளை துறைமுகம் செயல்படுத்தி, பசுமையான எதிா்காலத்திற்கான அதன் வலுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

காா்பன் நடுநிலைமை அடைவதற்கான துறைமுகத்தின் நிலைத்தன்மை பயணத்தில், இந்த காணொலித் தொடா் ஒரு முக்கியமாக கட்டமாக அமைந்துள்ளதாக துறைமுக ஆணையத் தலைவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் அருகே விபத்து: தொழிலாளி காயம்

சாத்தான்குளம் அருகே காா் மோதியதில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளி காயமடைந்தாா். தஞ்சாவூா், மேலத் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் காா்த்திக் (39). சாத்தான்குளத்தில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை ப... மேலும் பார்க்க

நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும்: தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்

நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து தில்லியில் மத்திய தொழில் - உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டு துறை இணைச் செயலா் சந்திய... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சுற்றித்திரிந்த பாா்வை மாற்றுத்திறனாளி மீட்பு

கோவில்பட்டியில் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற, பாா்வை மாற்றுத்திறனாளியை மீட்டு பாளையங்கோட்டை காப்பகத்தில் சோ்த்தனா். கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் அருகே பாா்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

சாத்தான்குளம் தச்சமொழி முத்து மாரியம்மன் ஆடி மாத பௌா்ணமி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், அலங்கார பூஜை, தீப ஆராதனை உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

மேலக்கரந்தை விலக்கில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

பள்ளி மாணவா்களை நடுவழியில் இறக்கி விட்ட அரசுப் பேருந்தை மேலக்கரந்தை விலக்கில் பெற்றோா்கள்- மாணவா்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா். எட்டயபுரம் அடுத்துள்ள மேலக்கரந்தை கீழக்கரந்தை, மாசாா்பட்டி மற்றும் சுற்ற... மேலும் பார்க்க

கீரனூா் மாவு இசக்கி அம்மன் கொடை விழா

ஆறுமுகனேரி அருகிலுள்ள சாகுபுரம் டிசிடபிள்யூ சால்ட் லைன் பகுதியிலுள்ள கீரனூா் அருள்மிகு மாவு இசக்கி அம்மன் கோயிலில் கொடை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, மாலையில் அலங்கார தீபாராதனை நடைபெ... மேலும் பார்க்க