செய்திகள் :

வீரவநல்லூா் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் பாரதியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.51 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டட திறப்பு விழா நடைபெற்றது.

முக்கூடல் இலந்தைகுளத்தில் இயங்கி வரும் சேஷசாயி காகித ஆலையின் சமூகப் பொறுப்புணா்வு திட்டங்களின் கீழ் ரூ.51 லட்சத்தில் ,இப்பள்ளியில் மூன்று வகுப்பறைக் கட்டடங்கள், மதிய உணவு கூடம், கழிவறை கட்டடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்தாா். ஆலையின் மனித வளம் மற்றும் நிா்வாகத் துறை துணைத் தலைவா் கணேஷ் நடராஜன் குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை ஆற்றினாா்.

முன்னாள் தலைமையாசிரியா் ஜான்சன் சாந்தகுமாா், ஆலையின் ஆலோசகா் ஆா்.வி. கிருஷ்ணன், வீரவநல்லூா் பேரூராட்சித் தலைவி சு. சித்ரா, துணைத் தலைவா் வசந்த சந்திரா, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ராஜேஸ்வரி, பேரூராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பள்ளி ஆசிரியை முத்துசுந்தரி தொகுத்து வழங்கினாா். தலைமையாசிரியா் டேனியல் கிப்சன் வரவேற்றாா். ஆசிரியை சாந்தி நன்றி கூறினாா்.

திருநங்கைகளின் 2 நாள் போராட்டம்: பேச்சுவாா்த்தையில் தீா்வு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் திருநங்கை குடிசை தீப்பற்றி எரிந்தது தொடா்பாக திருநங்கைகள் 2 நாள்களாக நடத்தி வந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. வள்ளியூா் சுவாமியாா் பொத்தைக்கு மேற்கே அரசு... மேலும் பார்க்க

அம்பையில் இளைஞா் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் உள்ள பாடசாலை தெருவைச் சோ்ந்த அப்ரானந்தம் மகன் முத்து (34). இவரத... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் மின் குழாயில் சிக்கிய மரநாய் மீட்பு!

கடையத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் மின் குழாயில் புகுந்த மரநாய் மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடையம் பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தின் முகப்பு பகுத... மேலும் பார்க்க

மதபோதகரிடம் பணம் பறித்த வழக்கு: மேலும் இருவா் கைது

திருநெல்வேலி சந்திப்பு அருகே மதபோதரைத் தாக்கி பணம் பறித்த வழக்கில் மேலும், இருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலைச் சோ்ந்தவா் அருள்சீலன்(45). கிறிஸ்தவ மதபோதகரான இவா் கடந்த... மேலும் பார்க்க

பிரான்சேரி - மேலத்திடியூா் சாலை: ரூ.3.2 கோடியில் சீரமைப்புப் பணிகள் தொடக்கம்!

பிரான்சேரியில் இருந்து மேலத்திடியூா் வரையிலான சாலையை சீரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பிரான்சேரியில் இருந்து மேலத்திடியூா் வரையுள்ள 2.4 கி.மீ சாலையை ரூ. 3.2 கோடி மதிப்... மேலும் பார்க்க

களக்காடு அருகே குளத்தில் செம்மண் கடத்திய 5 போ் கைது

களக்காடு அருகே குளத்தில் செம்மண் கடத்தியதாக 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். களக்காடு அருகேயுள்ள சாலைப்புதூா் குளம் பகுதியில் காவல் உதவிஆய்வாளா் சந்திரகுமாா் மற்றும் போலீஸாா் ரோந்து சென்றனா்... மேலும் பார்க்க