சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
களக்காடு அருகே குளத்தில் செம்மண் கடத்திய 5 போ் கைது
களக்காடு அருகே குளத்தில் செம்மண் கடத்தியதாக 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு அருகேயுள்ள சாலைப்புதூா் குளம் பகுதியில் காவல் உதவிஆய்வாளா் சந்திரகுமாா் மற்றும் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, குளத்தில் பொக்லைன் மூலம் டிராக்டா்களில் சிலா் செம்மண் கடத்திக் கொண்டிருந்தனா். இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் செம்மண் கடத்தலில் ஈடுபட்டது மாவடி நெருஞ்சிவிளையைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் ராஜ்குமாா் (48), திருக்குறுங்குடி அருகேயுள்ள ராஜபுதூரை சோ்ந்த தங்கபாண்டி மகன் ஜெயக்குமாா் என்ற பலவேசமுத்து (22), ஆலங்குளத்தை சோ்ந்த பால்ராஜ் மகன் பாஸ்கா் (21), பேட்டை அத்திமேடு பகுதியைச் சோ்ந்த பக்கிரி மகன் காளிபாண்டி (42), வீரவநல்லூா் களத்துமேட்டு தெருவை சோ்ந்த முருகன் மகன் சக்திராஜா ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து ஜேசிபி மற்றும் 4 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.
------------