செய்திகள் :

PMK: ``தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது; போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது'' - ராமதாஸ்

post image

பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லாமலேயே அன்புமணி தலைமையில் முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதையடுத்து இன்று இரவு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில், வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் மாநாடு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் ராமதாஸின் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்திமதி, பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். பெண்கள் மாநாடு என்பதால் அதிக எண்ணிக்கையிலான பெண் பவுன்சர்கள் பாதுகாப்பில் இறக்கப்பட்டிருந்தனர். மாலையில் தொடங்க வேண்டிய இம்மாநாடு கனமழை காரணமாக தாமதமானது. இம்மாநாட்டில் 10.5% இட ஒதுக்கீடு, மதுவிலக்கு, போதைப் பொருள் கஞ்சா ஒழிப்பு உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாமக ராமதாஸ்

என்னுடைய அருமை நண்பர் கலைஞர்

இதில் போதை ஒழிப்பு, வன்னியர்களுக்கான உள்இட ஒதுக்கீடு தொடர்பாக பேசியிருக்கும் ராமதாஸ், "கஞ்சா, சாராயம் போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும். இதில் இந்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் ஆட்சிக்கு வந்து செய்யவோம்.

10.5% உள் இட ஒதுக்கீட்டை முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் உடனே நிறைவேற்ற வேண்டும். என்னுடைய அருமை நண்பர் கலைஞர் 20% உள் இட ஒதுக்கீடு கொடுத்தார். சாதிவாரிக் கணக்கெடுப்பதில் முதவருக்கு என்ன தயக்கம் இருக்கிறது. நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது.

அன்புமணி
அன்புமணி

தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது

கங்கை கொண்ட சோழபுரம் பற்றி பேசுகிறார்கள். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன், கங்கை கொண்ட சோழபுரம் கட்டிய ராஜேந்திர சோழனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். தந்தை, தனயனான அவர்கள் ஆட்சி எப்படி இருந்தது என்றும் தெரியும். தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது என்பதற்கு அதுவே ஒரு நல்ல உதாரணம்." என்று பேசியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

Today Roundup: தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம் டு மோடியின் தொழில்நுட்ப புரட்சி வரை| 10.8.2025

இன்றைய நாளின் (ஆகஸ்ட் 10) முக்கியச் செய்திகள்!*பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் போராடி வரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம் ப... மேலும் பார்க்க

``Zero Defect, Zero Effect; தொழில்நுட்பத்தில் புரட்சி செய்ய இதுவே சரியான நேரம்'' - பிரதமர் மோடி

பெங்களூரு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் இணைப்பான மஞ்சள் வழித்தட சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். புதிய மெட்ரோ ரயிலைக் கொடி அசை... மேலும் பார்க்க

"போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை திமுக அரசு ஏற்க வேண்டும்" - சீமான், கி.வீரமணி ஆதரவு

அப்செட்டாக மண்டலங்கள் 5 மற்றும் 6 யை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10 வது நாளாகத் தொடர்ந்து க... மேலும் பார்க்க

கொலைவெறித் தாக்குதல்; ஆணவக் கொலை மிரட்டல்! பேசித் தீர்க்கச் சொன்ன `திருச்சி போலீஸ்' - என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, கல்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடும் சூழலில், இளைஞர் ஒருவருக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்து கொடூரமாகத் தாக்கியிருக்கு... மேலும் பார்க்க

``இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன்'' - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

'இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு தவறான புரிதல் உள்ளது. இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்' என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியிருக்கிறார். தனியார் கல்லூரியில... மேலும் பார்க்க

கும்பகோணம்: குப்பைக் கூளமாய் காட்சியளிக்கும் நதிநீர் கால்வாய்; அலட்சியம் காட்டாமல் சீரமைப்பார்களா?

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த புளியஞ்சேரி என்ற கிராமத்தை ஒட்டிய நதிநீர்கால்வாய்தான் நாம் இங்கு பார்த்து கொண்டு இருக்கிறோம். இந்த கால்வாயானது 1924-ம் வருடம் விவசாய பாசனத்திற... மேலும் பார்க்க