செய்திகள் :

``Zero Defect, Zero Effect; தொழில்நுட்பத்தில் புரட்சி செய்ய இதுவே சரியான நேரம்'' - பிரதமர் மோடி

post image

பெங்களூரு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் இணைப்பான மஞ்சள் வழித்தட சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். புதிய மெட்ரோ ரயிலைக் கொடி அசைத்து இயக்கி வைத்த மோடி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் பள்ளி குழந்தைகள், பொதுமக்களுடன் பயணித்தார்.

பெஙகளூரில் மோடி

இதையடுத்து பேசியிருக்கும் பிரதமர் மோடி, "உலகப் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் டாப் 10 பட்டியலிலிருந்து, டாப் 5 பட்டியலுக்கு முன்னேறியிருக்கிறது இந்தியா. தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பெங்களூரு, இந்தியாவை தொழில்நுட்பத்தில் தன்னிறைவுப் பெற்ற நாடாக முன்னேற்ற பெரும் பங்காற்ற வேண்டும்.

'Zero Defect, Zero Effect' என்ற கொள்கையின் அடிப்படையில் நம் நாட்டிற்குத் தேவையான தொழில்நுட்பப் பொருள்கள் அனைத்தையும் நாமே தயாரிக்கும் அளவிற்கு தன்னிறைவைப் பெற்று முன்னேற வேண்டும். 'Zero Defect, Zero Effect' என்றால் எந்தக் கோளாறும் இல்லாத, சுற்றுச் சூழலிற்குத் தீய பாதிப்பை ஏற்படுத்தாத தொழில்நுட்பப் பொருள்களைத் தயாரிக்க வேண்டும் என்பதுதான்.

'டெக் ஆத்மநிர்பர் பாரத் (Tech Atmanirbhar Bharat)' என்ற பெயரில் புதிய திட்டத்தின் மூலம் இந்தியா தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்குவதில் இந்த அரசு முக்கியக் கவனம் செலுத்தப்போகிறது. இந்தியாவை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம். தொழில்நுட்பத்தில் புரட்சிகள் செய்யவும் இதுவே சரியான நேரம்" என்று பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Today Roundup: தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம் டு மோடியின் தொழில்நுட்ப புரட்சி வரை| 10.8.2025

இன்றைய நாளின் (ஆகஸ்ட் 10) முக்கியச் செய்திகள்!*பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் போராடி வரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம் ப... மேலும் பார்க்க

PMK: ``தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது; போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது'' - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லாமலேயே அன்புமணி தலைமையில் முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து இன்று இரவுபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில... மேலும் பார்க்க

"போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை திமுக அரசு ஏற்க வேண்டும்" - சீமான், கி.வீரமணி ஆதரவு

அப்செட்டாக மண்டலங்கள் 5 மற்றும் 6 யை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10 வது நாளாகத் தொடர்ந்து க... மேலும் பார்க்க

கொலைவெறித் தாக்குதல்; ஆணவக் கொலை மிரட்டல்! பேசித் தீர்க்கச் சொன்ன `திருச்சி போலீஸ்' - என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, கல்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடும் சூழலில், இளைஞர் ஒருவருக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்து கொடூரமாகத் தாக்கியிருக்கு... மேலும் பார்க்க

``இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன்'' - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

'இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு தவறான புரிதல் உள்ளது. இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்' என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியிருக்கிறார். தனியார் கல்லூரியில... மேலும் பார்க்க

கும்பகோணம்: குப்பைக் கூளமாய் காட்சியளிக்கும் நதிநீர் கால்வாய்; அலட்சியம் காட்டாமல் சீரமைப்பார்களா?

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த புளியஞ்சேரி என்ற கிராமத்தை ஒட்டிய நதிநீர்கால்வாய்தான் நாம் இங்கு பார்த்து கொண்டு இருக்கிறோம். இந்த கால்வாயானது 1924-ம் வருடம் விவசாய பாசனத்திற... மேலும் பார்க்க