செய்திகள் :

``இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன்'' - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

post image

'இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு தவறான புரிதல் உள்ளது. இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்' என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியிருக்கிறார்.

தனியார் கல்லூரியில் மாணவர்கள் உடனான கலந்துரையாடலின் போது பேசிய அவர், "இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு தவறான புரிதல் இருக்கிறது. நிறையே பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால் நான் 95 எடுத்தேன், நீங்கள் 70 மார்க் தான் எடுத்திருக்கீர்கள்.

ஆனால் 95 மதிப்பெண் எடுத்த என்னை ஒதுக்கிவிட்டு 70 மதிப்பெண் எடுத்த அவர்களுக்கு சீட் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். இது அவர்களுக்கான கோபம். ஆனால், 75 எடுத்தவர் ஒரு காலில் ஓடிக்கொண்டு இருக்கிறார். 95 எடுத்தவர் இரண்டு காலில் ஓடிக்கொண்டு இருக்கிறார்.

நான் இரண்டு காலில் ஓடி முதலிடம் வந்தேன். ஆனால் 50 மீட்டரில் உங்களுக்கு வெற்றி என்று சொல்லிவிட்டார்கள் என சொல்லக்கூடாது. அவர்களை எப்போது இரண்டு காலில் ஓட வைக்கிறமோ அதுவரைக்கும் ரிசர்வேஷன் என்பதை இந்த நாட்டில் இருந்து நாம் எடுக்க முடியாது.

இடஒதுக்கீடு கொடுத்ததால் தரம் குறைந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் இதை நான் ஏற்கவில்லை. இட ஒதுக்கீடு கொடுத்ததால்தான், பிசி, எம்.பி.சி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவுகளில் இருந்த புத்திசாலித்தனமானவர்கள் வந்திருக்கிறார்கள். அதனால் இதை பொத்தாம் பொதுவாக பேசமுடியாது. இதை தரவுகள் வைத்துதான் பேச முடியும். இட ஒதுக்கீடு இல்லையென்றால் அந்த குடும்பம் எல்லாம் தரையோடு தரையாக போய்விடும்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

இட ஒதுக்கீடு கொடுப்பதால் தரம் குறைகிறது என்ற வாதத்தை நான் எந்த காலத்திலும் ஏற்க மாட்டேன். அந்த மாதிரி ஒன்று கிடையவே கிடையாது. நாடு முன்னேற எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும். அந்த வாய்ப்பை கொடுப்பதற்கு இட ஒதுக்கீடு என்பது ரொம்ப முக்கியம். இதுதான் உண்மை" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கும்பகோணம்: குப்பைக் கூளமாய் காட்சியளிக்கும் நதிநீர் கால்வாய்; அலட்சியம் காட்டாமல் சீரமைப்பார்களா?

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த புளியஞ்சேரி என்ற கிராமத்தை ஒட்டிய நதிநீர்கால்வாய்தான் நாம் இங்கு பார்த்து கொண்டு இருக்கிறோம். இந்த கால்வாயானது 1924-ம் வருடம் விவசாய பாசனத்திற... மேலும் பார்க்க

பர்கூர்: சிதிலமடைந்து இடியும் நிலையில் வீடுகள்; அச்சத்துடன் வாழும் பழங்குடிகள் - கண்டுகொள்ளுமா அரசு?

பர்கூர் அருகே சிதலமடைந்த வீடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், தங்களது குடியிருப்புகளை புனரமைக்காமல் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர... மேலும் பார்க்க

கனரக வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு; நெரிசலை தவிர்க்க தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதையும் கருத்தில் கொண்டு, நாளை முதல் காலை 6.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணி வரை சென்னை தாம்பரம் பகுதியில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து... மேலும் பார்க்க

India - Russia: "இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் ரஷ்ய அதிபர் புதின்"- பிரதமர் மோடி சொன்ன தகவல்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதால் கூடுதல் வரிவிதித்துள்ளார். இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் உரசலை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ர... மேலும் பார்க்க

"திமுக-தான் போலி வாக்காளர்களால் வெற்றி பெற்றது" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவை தேர்தல் மற்றும் அதற்கடுத்த 4 மாதங்களில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பா.ஜ.க-வுடன் சேர்ந்து இந்திய அர... மேலும் பார்க்க

தென்காசி: கரடி தாக்கி மூவர் காயம்; பணிக்குச் செல்ல விவசாயிகள் அச்சம்; பிடிக்கும் பணியில் வனத்துறை

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது புளியங்குடி. இந்தப் பகுதியில் யானை, காட்டுப் பன்றி எனக் காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவதும், அதனை மக்கள் மீண்டும் காட்டுக்குள் ... மேலும் பார்க்க