செய்திகள் :

Rashmika: ``எனக்கு எதிரா ட்ரோல் செய்ய பணம் கொடுக்குறாங்க'' - வருத்தமாக பேசிய ராஷ்மிகா

post image

2016-ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கன்னடத் திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், தொடர்ந்து பாலிவுட் வரை சென்றிருக்கிறது.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

சமீபத்தில் இவரது நடிப்பில் 'குபேரா' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து 'MYSAA' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

'நேஷ்னல் க்ரஷ்' என்று அழைக்கப்படும் ராஷ்மிகாவிற்கு எந்த அளவிற்கு ரசிகர்களிடையே ஈர்ப்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு ட்ரோல்களையும் அவர் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அவர், " நான் மிகவும் எமோஷனலான ஒரு நபர். அதை நான் வெளியில் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அப்படி செய்வதால் ராஷ்மிகா கேமராவுக்காக செய்கிறார் என்று கூறுகிறார்கள்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

எனக்கு எதிராக ட்ரோல் செய்ய பணம் கொடுக்கப்படுகிறது. என்னை வளர விடாமல் தடுக்கின்றனர். இது வருத்தமளிக்கிறது. என் மீது அன்பு காட்டாவிட்டாலும், அமைதியாக இருங்கள், அதுவே போதுமானது.

நான் ரொம்ப உண்மையாவும் இருப்பேன். ஆனால் எப்போதும் அதை என்னால் வெளிப்படுத்த முடியாது. ஏனென்றால், இங்கு ரொம்ப அன்பாக இருந்தால் போலியாக இருக்கிறதாக நினைக்கிறார்கள்.” என்று வருத்தமாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

ED: " நான் விளம்பரப்படுத்திய செயலி சட்டப்பூர்வமானது!" - விசாரணைக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா

ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் நடித்ததாக விஜய் தேவரகொண்டா, ரானா டகுபதி, பிரகாஷ் ராஜ் உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜரா... மேலும் பார்க்க

Chiranjeevi: "என்னைத் தாக்குபவர்களுக்கு நான் எளிதான இலக்கு, ஆனால்.." - என்ன சொல்கிறார் சிரஞ்சீவி?

'சிரஞ்சீவி அறக்கட்டளை' மூலமாகப் பலருக்கும் பல நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார் நடிகர் சிரஞ்சீவி. முக்கியமாக, இரத்த வங்கிகளை நடத்தி, அதன் மூலம் பலருக்கு இரத்த தானம் செய்து வருகிறது 'சிரஞ்... மேலும் பார்க்க

Kingdom: "முற்றிலும் கற்பனையே" - இலங்கைத் தமிழர்கள் சித்தரிப்பு சர்ச்சை; வருத்தம் தெரிவித்த படக்குழு

'ஜெர்சி' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கெளதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கிற தெலுங்குத் திரைப்படம் 'கிங்டம்'.விஜய் தேவரகொண்டா, பாக்யஶ்ரீ போஸ் உட்படப் பலரும் நடித்திருக்க... மேலும் பார்க்க

Shah Rukh Khan: "33 ஆண்டுக்கால பயணத்திற்குப் பிறகுக் கிடைத்த கௌரவம்" - அல்லு அர்ஜுன் வாழ்த்து

71வது தேசிய விருதுகள் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். சக கலைஞர்கள் அவர்களை வாழ்த்தி வருகின்றன... மேலும் பார்க்க

Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்படி இருக்கு கிங்டம்?

1991-ல் போலீஸ் கான்ஸ்டபிளான சூரி (விஜய் தேவரகொண்டா),18 வருடங்களுக்கு முன் காணாமல் போன தன் அண்ணனைத் தேடும் பணியில் இருக்கிறார். அப்போது, அநியாயத்தைக் கண்டால் பொங்கும் குணம் கொண்ட கோபக்கார சூரி, உயர் அத... மேலும் பார்க்க

Kingdom: ``எனக்காக கேரவான் கதவுகள் திறக்கப்பட்டன!'' - வைரலாகும் `கிங்டம்' பட நடிகரின் பேச்சு!

'கிங்டம்' திரைப்படம் இன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. விஜய் தேவரகொண்டா, பாக்யஶ்ரீ போஸ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹைதரா... மேலும் பார்க்க