செய்திகள் :

மருத்துவர்களை விட ஏஐ சிறந்தது: எலான் மஸ்க்

post image

மருத்துவர்களை விட செய்யறிவு தொழில்நுட்பம் சிறந்தது என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மருத்துவ துறையில் மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒன்றாக செய்யறிவு தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் செய்யறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திலும் குரோக் என்ற செய்யறிவு அம்சம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து அதில் பல மேம்பாடுகளையும் எலான் மஸ்க் செய்து வருகிறார்.

இந்நிலையில், செய்யறிவு தொழில்நுட்பமான சாட் ஜிபிடி மூலம் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த கதையை பெண் ஒருவர் கூறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்களின் கருத்துகளுக்கு சவால்விடும் வகையில் சில வழிமுறைகளைக் கூறி புற்றுநோயிலிருந்து மீண்டு வரச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த விடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது.

மருத்துவர்களுக்கு செய்யறிவுக்கும் இடையே மறைமுகமான போரின் தொடக்கமாக இது மாறியுள்ளதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

மருத்துவர்களிடம் செல்வதற்கு முன்பு கூகுளில் சில தகவல்களைத் தேடி நோயிக்கான அறிகுறிகளைக் அறிந்துகொண்டு நோயாளிகள் செல்வதும் அதிகரித்து வருகிறது. இதனை கடைபிடிக்க வேண்டாம் என மருத்துவர்கள் சிலர் கூறுவதும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே மருத்துவர்களைக் காட்டிலும் செய்யறிவு தொழில்நுட்பம் சிறந்து விளங்குவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

பல மருத்துவர்களைக் காட்டிலும் செய்யறிவு சிறந்ததாக உள்ளது. இதுதான் உண்மை. இது மேலும் சிறந்ததாகவே மாறும். இது என்னுடைய தொழில் உள்பட, மற்ற வேலை செய்பவர்களுக்கும் பொருந்தும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க |டிரம்ப் விருந்துக்கு மறுப்பு! அமெரிக்க வரலாற்றை மாற்றியமைக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட ஆஸ்கர் நடிகை!

AI is already better than most doctors says Elon Musk after cancer survivor credits ChatGPT

டிரம்ப் விருந்துக்கு மறுப்பு! அமெரிக்க வரலாற்றை மாற்றியமைக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட ஆஸ்கர் நடிகை!

ஒருநாள் இரவு விருந்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைத்ததாக பிரிட்டிஷ் நடிகை கூறியது பேசுபொருளாகியுள்ளது.ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் பிரிட்டிஷ் நடிகை எம்மா தாம்சனுக்... மேலும் பார்க்க

காஸாவின் விடுதலையே இஸ்ரேலின் இலக்கு! - நெதன்யாகு

காஸாவில் இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார்.ஜெருசலேமில் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “எங்களது குறிக்கோள் காஸாவை கையகப்படுத்து... மேலும் பார்க்க

மீண்டும் அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி: அமெரிக்க தலைவர்களுடன் சந்திப்பு!

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ராணுவ உயரதிகாரிகளையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்... மேலும் பார்க்க

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஸா சிட்டி முழுவதையும் படை பலத... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி இழப்பு!

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தான் விமானநிலையங்கள் நிர்வாகம் (பிஏஏ) ரூ. 123 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதற்கான மு... மேலும் பார்க்க

பாலஸ்தீன பீலே கொலை..! யுஇஎஃப்ஏவை விமர்சித்த சாலா!

பாலஸ்தீன பீலே எனப்படும் கால்பந்து வீரர் சுலைமான் அல்-ஒபெய்டு இஸ்ரேலிய தாக்குதலில் பலியானதுக்கு பதிவிட்ட யுஇஎஃப்ஏவை பிரபல கால்பந்து வீரர் முகமது சாலா விமர்சித்துள்ளார். தெற்கு காஸாவில் மனிதாபிமான உதவிக... மேலும் பார்க்க