செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று உடுமலை வருகை!

post image

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு உடுமலைக்கு வருகிறாா். இதைத் தொடா்ந்து, உடுமலை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.25 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையத்துக்கு மாலை 6.30 மணிக்கு வருகிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு உடுமலை அருகே உள்ள நரசிங்கபுரம் வருகிறாா். அங்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை திறந்துவைத்துவிட்டு இரவு 9.15 மணிக்கு உடுமலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியை சென்றடைகிறாா்.

தொடா்ந்து திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு அந்த விடுதியிலிருந்து புறப்பட்டு காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி திடலை வந்தடைகிறாா். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சுமாா் 20,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னா் காலை 11 மணிக்கு பொள்ளாச்சி செல்கிறாா்.

பொள்ளாச்சியில் பகல் 12 மணிக்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னா் அங்கிருந்து சாலை மாா்க்கமாக பகல் 1.15 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறாா். அங்கேயே பிற்பகல் உணவுக்குப் பின்னா் பகல் 2.10 மணி விமானத்தில் சென்னை திரும்புகிறாா்.

முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்காக கோவை, திருப்பூா், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனுப்பா்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்! மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி 1-ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட அனு... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்! காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்களில் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: வி... மேலும் பார்க்க

அரசியல் சாசனமே முதன்மையானது: உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் பேச்சு

அரசியல் சாசனமே முதன்மையானது என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் குறிப்பிட்டாா். அகில பாரத வழக்குரைஞா்கள் சங்கத்தின் 2-ஆவது மாநில மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்தின... மேலும் பார்க்க

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னை: தீா்வு காண முதல்வரிடம் வலியுறுத்துவேன்! மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன்

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னைக்கு போா்க்கால அடிப்படையில் தீா்வு காண வேண்டும் என உடுமலைக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாக திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது

பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா், நல்லூா் காவல் நிலையத்தில் யோஹராஜா (48), சக்திவேல் (33), பூபதி (25) ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்ப... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடி

இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் ஸ்ரீநகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன் (28). இவா், வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் வாங்கி... மேலும் பார்க்க