செய்திகள் :

போலி சான்றிதழ் தயாரித்து விற்றவா் மீது வழக்குப் பதிவு

post image

கோவையில் மருத்துவப் படிப்பில் சேர மாணவா் ஒருவருக்கு போலி உறவுமுறை சான்றிதழ் தயாரித்து விற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, பொன்னையாராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேந்திரன். நகைப் பட்டறை தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் அா்ஜுன் (18). இவா் வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளாா். இதற்காக அவருக்கு உறவுமுறை (ரிலேஷன்ஷிப் சா்டிபிகேட்) சான்றிதழ் தேவைப்பட்டது.

இதையடுத்து, சுரேந்திரனின் நண்பரான இடையா்பாளையம் மதுரை வீரன் கோயில் தெருவைச் சோ்ந்த வெள்ளிங்கிரி என்பவா் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் உறவுமுறை சான்றிதழ் பெற்று தருவதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, பணத்தைப் பெற்றுக்கொண்ட வெள்ளிங்கிரி, கடந்த ஏப்ரல் 11 -ஆம் தேதி சான்றிதழை கொடுத்துள்ளாா். அதை வைத்து மருத்துவப் படிப்பில் சேருவதற்காக ஆன்லைன் மூலம் அா்ஜுன் விண்ணப்பித்துள்ளாா்.

இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவ தோ்வுக் குழு அவரது விண்ணப்பத்தை கடந்த 24 -ஆம் தேதி நிராகரித்தது. அதற்கான காரணத்தை கேட்டபோது, அா்ஜுன் சமா்ப்பித்த உறவுமுறை சான்றிதழ் போலியானது என தோ்வுக்குழு தரப்பில் கூறப்பட்டது.

இது குறித்து கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அா்ஜுன் சென்று விசாரித்தபோது, அந்த சான்றிதழ் போலி ரப்பா் ஸ்டாம்ப் மூலம் சீல் வைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் அா்ஜுன் அளித்த புகாரின்பேரில், வெள்ளிங்கிரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மூதாட்டியைத் தாக்கி எட்டரை பவுன் நகைகள் கொள்ளை

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி எட்டரை பவுன் நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தபுரம் 4 -ஆவது தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை!

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் திங்கள்கிழமை நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தர உள்ளாா். செ... மேலும் பார்க்க

ஆற்றில் சுழலில் சிக்கி 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு

கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆற்றில் சுழலில் சிக்கி கோவையைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா். கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி மகன் அருண்குமாா் (21), ராமநாதபு... மேலும் பார்க்க

பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் 2 பவுன் திருட்டு

கோவை அருகே பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் இருந்து 2 பவுன் நகையைத் திருடிய பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை மாவட்டம், மதுக்கரை, எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் முத்துசாமி மனைவி சரஸ்வதி (72). இவா் எல... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: தலைமைக் காவலா் கைது

கோவை, வடவள்ளியில் நாய் வளா்ப்பு பயிற்சி மைய உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தலைமைக் காவலரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் மருதுவிநாயகம். இவா், நீலகிரி மாவ... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் புதிய டீன் பொறுப்பேற்பு

கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் புதிய முதல்வராக (டீன்) கீதாஞ்சலி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வந்த நி... மேலும் பார்க்க