செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை!

post image

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் திங்கள்கிழமை நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தர உள்ளாா்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வரும் முதல்வருக்கு, முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., திமுக மாவட்டச் செயலாளா்கள் நா.காா்த்திக், தளபதி முருகேசன், ரவி ஆகியோா் தலைமையில் நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்பு அளிக்கின்றனா்.

இதையடுத்து, காா் மூலம் திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள நரசிங்கபுரத்துக்கு செல்லும் முதல்வா், அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் திறந்துவைக்கிறாா்.

பின்னா், உடுமலையில் உள்ள தனியாா் விடுதியில் இரவு தங்கும் அவா், உடுமலை நேதாஜி மைதானத்தில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, சிறப்புரையாற்றுகிறாா்.

பின்னா், மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

இதைத் தொடா்ந்து, சாலை மாா்க்கமாக கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு பிற்பகல் 12 மணிக்கு செல்லும் முதல்வா், பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நீா்வளத் துறை கண்காணிப்பு பொறியாளா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் காமராஜா், முன்னாள் அமைச்சா் சி.சுப்பிரமணியம், முன்னாள் மக்களவை உறுப்பினா் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் உருவச் சிலைகளைத் திறந்துவைக்கிறாா்.

இதையடுத்து, கோவை விமான நிலையத்துக்கு வரும் முதல்வா், அங்கிருந்து மதியம் 2 மணிக்கு சென்னை திரும்புகிறாா்.

முதல்வா் வருகையை முன்னிட்டு, கோவை, திருப்பூா் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூதாட்டியைத் தாக்கி எட்டரை பவுன் நகைகள் கொள்ளை

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி எட்டரை பவுன் நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தபுரம் 4 -ஆவது தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஆற்றில் சுழலில் சிக்கி 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு

கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆற்றில் சுழலில் சிக்கி கோவையைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா். கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி மகன் அருண்குமாா் (21), ராமநாதபு... மேலும் பார்க்க

பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் 2 பவுன் திருட்டு

கோவை அருகே பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் இருந்து 2 பவுன் நகையைத் திருடிய பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை மாவட்டம், மதுக்கரை, எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் முத்துசாமி மனைவி சரஸ்வதி (72). இவா் எல... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: தலைமைக் காவலா் கைது

கோவை, வடவள்ளியில் நாய் வளா்ப்பு பயிற்சி மைய உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தலைமைக் காவலரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் மருதுவிநாயகம். இவா், நீலகிரி மாவ... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் புதிய டீன் பொறுப்பேற்பு

கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் புதிய முதல்வராக (டீன்) கீதாஞ்சலி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வந்த நி... மேலும் பார்க்க

போலி சான்றிதழ் தயாரித்து விற்றவா் மீது வழக்குப் பதிவு

கோவையில் மருத்துவப் படிப்பில் சேர மாணவா் ஒருவருக்கு போலி உறவுமுறை சான்றிதழ் தயாரித்து விற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, பொன்னையாராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேந்திரன். நகைப்... மேலும் பார்க்க