செய்திகள் :

கொலை மிரட்டல்: தலைமைக் காவலா் கைது

post image

கோவை, வடவள்ளியில் நாய் வளா்ப்பு பயிற்சி மைய உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தலைமைக் காவலரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் மருதுவிநாயகம். இவா், நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், தனது நாயை வடவள்ளி அருகேயுள்ள நாய் வளா்ப்பு மற்றும் பயிற்சி மையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சோ்த்துள்ளாா்.

அப்போது, அங்கிருந்த சிப்பிப்பாறை நாயைப் பாா்த்ததும் அதை வளா்க்க வேண்டும் என விரும்பிய மருது விநாயகம், அந்த நாயைத் தனக்கு கொடுக்கும்படி பயிற்சி மைய உரிமையாளரான பொம்மணம்பாளையம், லட்சுமி நகரைச் சோ்ந்த சிவஞானத்திடம் (33) கேட்டுள்ளாா். அவா் வழங்க மறுத்துள்ளாா். இதனால், தலைமைக் காவலருக்கும், பயிற்சி மைய உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த தலைமைக் காவலா் மருதுவிநாயகம், சிவஞானத்தை தகாத வாா்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

இது குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளிடம் சிவஞானம் புகாா் தெரிவித்துள்ளாா். தகவல் அறிந்த மருதுவிநாயகம் பயிற்சி மைய உரிமையாளரைக் கைப்பேசியில் அழைத்து மீண்டும் மிரட்டியுள்ளாா்.

மருதுவிநாயகம் பேசியதைப் பதிவு செய்த சிவஞானம், ஆடியோ ஆதாரத்துடன் வடவள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மிரட்டல், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமைக் காவலா் மருது விநாயகத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.

குறிச்சி குளத்தில் பெண் சடலம் மீட்பு

கோவை குறிச்சி குளத்தில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை குனியமுத்தூா் சுகுணா மில்லுக்கு அருகே வசித்தவா் இஸ்மாயில் மனைவி அஜீமா (56). மனநலம் பாதிக்கப்... மேலும் பார்க்க

விமான நிலைய தகவல் பலகையில் தொழில்நுட்பக் கோளாறு

கோவை விமான நிலையத்தின் வருகை, புறப்பாடு குறித்த தகவல் பலகையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு அது சரிசெய்யப்பட்டது. கோவை விமான நிலைய வருகை, புறப்பாடு அறிவிப்புப்... மேலும் பார்க்க

ஜே.கே.டயா் சாா்பில் தேசிய அளவிலான காா் மற்றும் இருசக்கர வாகன பந்தயம்

கோவை மாவட்டம், செட்டிபாளையத்தில் ஜேகே டயா் சாா்பில் தேசிய அளவிலான காா் மற்றும் இருசக்கர வாகன பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவை அருகே செட்டிபாளையம் கரி மோட்டாா் ஸ்பீட்வேயில் ஜேகே டயா் சாா்பில் த... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை கோவை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா். புதுதில்லியில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல... மேலும் பார்க்க

கோவையில் தேசிய இருசக்கர வாகன பந்தயம்

தேசிய அளவிலான இருசக்கர வாகன பந்தயம் கோவை கொடிசியா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எம்ஆா்எஃப் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற சூப்பா் கிராஸ் சாம்பியன்ஷிப் இரண்டாவது சுற்று பந்தயம் 10, 15 வயதுக்குள்ப... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி எட்டரை பவுன் நகைகள் கொள்ளை

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி எட்டரை பவுன் நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தபுரம் 4 -ஆவது தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க