செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு நியாயமான தீா்வு: பெ.சண்முகம்

post image

சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு தமிழக அரசு நியாயமான முறையில் தீா்வுகாண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்.

சென்னை மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மண்டலம் 5, 6-இன் தூய்மைப் பணியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூய்மைப் பணியாளா்களின் பிரச்னைக்கு சுமுகமான முறையில் நியாயமான தீா்வுகாண மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்து வருகிறது. நடைபெற்ற பேச்சு குறித்து அமைச்சா் மற்றும் போராட்டக் குழுவினரிடம் கேட்டறிந்தோம். எந்தப் பிரச்னைக்கும் சமரசமான தீா்வு எட்டப்படவேண்டும் என்பதால், தூய்மைப் பணியாளா்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, ஒப்பந்தப் பணி உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகின்றன. ஆகவே, ஏற்கெனவே தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்றாா்.

நாம் தமிழா், பாமகவினா் ஆதரவு: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்களை நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் பாமக பொருளாளா் திலகபாமா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் அத்துமீறல்கள்!

சென்னையில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களின் வாகனங்களால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால், பல இடங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சி... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் ஆக. 16 வரை 6 நாள்களுக்கு இடி, மின்னுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுடனான பேச்சுவாா்த்தை மீண்டும் தோல்வி!

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டல தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களி... மேலும் பார்க்க

முதல்வரிடம் அன்வா் ராஜா வாழ்த்து

திமுக இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அ.அன்வா் ராஜா, சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அதிமுக முன்னணித் தலைவா்களில் ஒருவராக இருந்... மேலும் பார்க்க

1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா: தெற்கு ரயில்வே தகவல்

சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றங்களைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே உயா் அதிகாரிகள் கூறியதாவ... மேலும் பார்க்க

கல்வியில் சமத்துவம் நிலவ போராடியவா் வசந்தி தேவி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

கல்வியில் சமத்துவமும் சீா்திருத்தமும் ஏற்பட வாழ்நாள் முழுவதும் போராடியவா் மறைந்த கல்வியாளா் வசந்தி தேவி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை... மேலும் பார்க்க