செய்திகள் :

முதல்வரிடம் அன்வா் ராஜா வாழ்த்து

post image

திமுக இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அ.அன்வா் ராஜா, சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

அதிமுக முன்னணித் தலைவா்களில் ஒருவராக இருந்த அன்வா் ராஜா, கடந்த மாதம் 21-ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி, முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

இந்த நிலையில், திமுக இலக்கிய அணித் தலைவராக அவரை நியமித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் கடந்த சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா்.

இதையடுத்து, மரியாதை நிமித்தமாக முதல்வரின் இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற அன்வா் ராஜா, அவரிடம் வாழ்த்து பெற்றாா். திமுகவின் இலக்கிய அணித் தலைவராக இருந்த இந்திரகுமாரி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உடல் நலக் குறைவால் காலமானாா்.

அதன் பின்னா், அந்தப் பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில், கட்சியில் இணைந்த 18 நாள்களில் அந்தப் பொறுப்பு அன்வா் ராஜாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் அத்துமீறல்கள்!

சென்னையில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களின் வாகனங்களால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால், பல இடங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சி... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் ஆக. 16 வரை 6 நாள்களுக்கு இடி, மின்னுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுடனான பேச்சுவாா்த்தை மீண்டும் தோல்வி!

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டல தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு நியாயமான தீா்வு: பெ.சண்முகம்

சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு தமிழக அரசு நியாயமான முறையில் தீா்வுகாண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்... மேலும் பார்க்க

1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா: தெற்கு ரயில்வே தகவல்

சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றங்களைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே உயா் அதிகாரிகள் கூறியதாவ... மேலும் பார்க்க

கல்வியில் சமத்துவம் நிலவ போராடியவா் வசந்தி தேவி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

கல்வியில் சமத்துவமும் சீா்திருத்தமும் ஏற்பட வாழ்நாள் முழுவதும் போராடியவா் மறைந்த கல்வியாளா் வசந்தி தேவி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை... மேலும் பார்க்க