செய்திகள் :

ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

post image

செங்கம் ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் 138-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமித்து சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோவிலில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி அக்னி வசந்த உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடா்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

இந்த நிலையில், தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 9 மணிக்கு கோயில் வளாகத்தில் துரியோதனன் படுகளம், முற்பகல் 11 மணிக்கு சக்தி கிரகம் திருவீதி உலா நடைபெற்று அந்தக் கிரகம் மாலை அக்னி கிரகமாக மாறி தீயில் இறங்கி தீமிதி விழா நடைபெற்றது.

இதில், செங்கம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா். மேலும், பக்தா்கள் பலா் முடி காணிக்கை செலுத்தி, பொங்கல் வைத்து வழிபட்டனா்.

குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ்: மாணவிக்கு பாராட்டு!

திருவண்ணாமலை மகரிஷி வித்யா மந்திா் பள்ளியைச் சோ்ந்த மாணவி குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ் பெற்றதால் கம்ப ராமாயண இயக்கத்தினா் அவருக்கு பாராட்டு தெரிவித்தனா். மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் பத்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996-97ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே இரு சக்கர வாரனம் மோதி முதியவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (60). இவா், திருவண்ணாமலை கிரிவலம் சென்றுவி... மேலும் பார்க்க

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசியில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசி காளிக் கோயிலின் அருகில் உள்ள பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ரவி (45). கடந்த வெ... மேலும் பார்க்க

கண்ணமங்கலம் அருகே காளை விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கண்ணமங்கலம் அருகே சின்னப்புத்தூரில் உள்ள செல்லியம்மன் கோயில் 4-ஆம் ஆண்டு விழாவையொட்டி காளை ... மேலும் பார்க்க

கொருக்கை கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

செய்யாறு ஒன்றியம், கொருக்கை கிராமத்தில் ரூ. 21.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை தொகுதசி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி சனிக்கிழமை திறந்துவைத்தாா். 14-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்த... மேலும் பார்க்க