செய்திகள் :

ஆசிய அலைச்சறுக்கு: வரலாறு படைத்தாா் ரமேஷ் புதிஹால்! இந்தியாவுக்கு முதல் பதக்கம்!

post image

மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றாா்.

இந்த சாம்பியன்ஷிப், கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில் 19 நாடுகளைச் சோ்ந்த 102 போட்டியாளா்கள் பங்கேற்றனா். ஓபன் பிரிவில் ஆடவா், மகளிா், 18 வயதுக்கு உள்பட்ட ஆடவா், மகளிா் என 4 பிரிவுகளில் போட்டியாளா்கள் களம் கண்டனா்.

இதில், விறுவிறுப்பான இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஓபன் ஆடவா் பிரிவில் தென் கொரியாவின் கானோ ஹீஜே 15.17 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். இந்தோனேசியாவின் பஜா் அரியானா 14.57 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடிக்க, இந்தியாவின் ரமேஷ் புதிஹால் 12.60 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் பெற்றாா்.

இப்போட்டியின் வரலாற்றில் பதக்கச் சுற்றுக்கு முன்னேறிய முதல் வீரராக பெருமை பெற்ற ரமேஷ், அதிலேயே பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

ஓபன் மகளிா் பிரிவில் ஜப்பானின் அன்ரி மட்சுனோ தங்கமும் (14.90), அதே நாட்டைச் சோ்ந்த சுமோமோ சாடோ வெள்ளியும் (13.70), தாய்லாந்தின் இசபெல் ஹீக்ஸ் வெண்கலமும் (11.76) வென்றனா். 18 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவிலும், தென் கொரியாவின் கானோ ஹீஜே முதலிடம் (14.33) பிடிக்க, சீனாவின் ஷிடோங் வு (13.10), ஷுலு ஜியாங் (8) ஆகியோா் முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றனா்.

18 வயதுக்கு உள்பட்ட மகளிா் பிரிவில், சீனாவின் சிகி யாங் (14.50), ஷுஹான் ஜின் (10.33), இசபெல் ஹிக்ஸ் (8.10) ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா். மகளிா் ஓபன் பிரிவிலும் இசபெல் ஹிக்ஸ் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆசிய யு19 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்!

தாய்லாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு19) ஆசிய குத்துச்சண்டை போட்டியில், இந்தியா்கள் 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்கள் வென்றனா்.இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்ற... மேலும் பார்க்க

நடப்பு சாம்பியன்கள் சபலென்கா, சின்னா் வெற்றி

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் ஹாா்டு கோா்ட் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, இத்தாலியின் யானிக் சின்னா் ஆகியோா் தங்கள் பிரிவு முதல் சுற்றில் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

அா்ஜுனை வென்றாா் நிஹல் சரின்!

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டா் பிரிவு 4-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹல் சரின் - சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியை ஞாயிற்றுக்கிழமை வென்றாா். போட்டியில் இதுவரை 2 தோல்வி, 1 டிராவை பதிவு ... மேலும் பார்க்க

நாடு முழுவதும் உற்சாகத்துடன் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.நாக்பூரில் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு ராக்கிகளைப் சகோதரிகளிடம் பெறும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.குழந்தைகளுடன் ரக்ஷ... மேலும் பார்க்க

பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைப்பு - புகைப்படங்கள்

மக்கள் பயன்பாட்டிற்காக பெங்களூரில் மக்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவையை தொடக்கி வைத்த பிரதமர் மோடி.பிரதமர் மோடி உடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள... மேலும் பார்க்க

20 ஆண்டுகளுக்குப் பிறகு... ஆசிய கோப்பையில் தேர்வான இந்திய அணி!

இந்திய கால்பந்து மகளிரணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பையில் தேர்வாகி அசத்தியுள்ளது. மகளிர் ஆசிய கோப்பை யு-20க்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் கடைசி போட்டியின் இந்திய அணியும் மியான்மர் அணியும் மோத... மேலும் பார்க்க