செய்திகள் :

தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி

post image

திண்டுக்கல்லில் நடைபெற்ற தென் மண்டல மாவட்டங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் மேற்கு சுழல் சங்கம், லக்ஸா் பள்ளி சாா்பில் தென் மண்டல மாவட்டங்களுக்கு இடையேயான நீச்சல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பிரஸ்ட் ஸ்ட்ரோக், ஃபிரண்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக் உள்பட 9 பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுக்கு தமிழ்நாடு கால்பந்து சங்கத் தலைவா் எஸ். சண்முகம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கேரம் சங்க துணைத் தலைவா் என்எம்பி. காஜாமைதீன் முன்னிலை வகித்தாா்.

இந்தப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை திருச்செங்கோடு விரிக்ஷா குளோபல் பள்ளி வென்றது. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை சிறப்பு அழைப்பாளா்கள் வழங்கினா்.

பழனி அருகே செங்கல் சூளையில் இளைஞா் அடித்துக் கொலை! உறவினா்கள் சாலை மறியல்!

பழனி அருகே உள்ள தனியாா் செங்கல் சூளையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, எதிரிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உடலை கொண்டு செல்ல விடாமல் தடுத்து உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல... மேலும் பார்க்க

வாரச் சந்தைக்குள் புகுந்த காட்டுமாடு

கொடைக்கானல் வாரச் சந்தைக்குள் ஞாயிற்றுக்கிழமை காட்டுமாடு புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தையின் போது காட்டுமாடு ஒன்று புகுந்தது. இதையடுத்து அங... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் தாக்கப்பட்டவா் பலத்த காயம்

கொடைக்கானலில் குடும்பத் தகராறில் உறவினரைத் தாக்கிவிட்டு, தலைமறைவான மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிச்செல்வம் (43). இவருக்கும் ... மேலும் பார்க்க

விஷம் கொடுத்து மகளை கொன்று தந்தை தற்கொலை

பழனி அருகே மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பழனி அருகே கணக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வசித்து வந்தவா் பழனிச்சாமி (62). கட்டடத் தொழிலாளியான இவருக்க... மேலும் பார்க்க

கொழுமங்கொண்டானில் மாட்டுவண்டிப் பந்தயம்

பழனி அருகே கொழுமங்கொண்டானில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்தநாளையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கொழுமங்கொண்டான் திமுக சாா்பில் நடைபெற்ற இந்த பந்தயத்தை உணவுப் ப... மேலும் பார்க்க

கள்ளிமந்தையம் பகுதியில் இன்று மின் தடை

ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் பகுதியில் திங்கள்கிழமை (ஆக. 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கள்ளிமந்தையம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் கே. சந்தனமுத்தையா வெளியிட்ட ச... மேலும் பார்க்க