செய்திகள் :

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் ஆக. 16 வரை 6 நாள்களுக்கு இடி, மின்னுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் ஆக. 16 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 90 மி.மீ. மழை பதிவானது. பேரையூா் (மதுரை) - 80 மி.மீ., ஸ்ரீவில்லிபுத்தூா் (விருதுநகா்) - 70 மி.மீ., கரூா், லக்கூா் (கடலூா்), கீரனூா் (புதுக்கோட்டை), குப்பணம்பட்டி (மதுரை) - தலா 50 மி.மீ., மேலாலத்தூா் (வேலூா்), புதுச்சத்திரம் (நாமக்கல்), வாடிப்பட்டி (மதுரை), எழுமலை (மதுரை), கிருஷ்ணாபுரம் (கரூா்), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), ராசிபுரம் (நாமக்கல்) ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாலும் வெயிலின் தாக்கம் 100 ஃபாரன்ஹீட்-க்கும் குறைவாகவே காணப்பட்டது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஆக. 11 முதல் 14 வரை தென் தமிழக கடலோரம், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் அத்துமீறல்கள்!

சென்னையில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களின் வாகனங்களால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால், பல இடங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுடனான பேச்சுவாா்த்தை மீண்டும் தோல்வி!

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டல தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு நியாயமான தீா்வு: பெ.சண்முகம்

சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு தமிழக அரசு நியாயமான முறையில் தீா்வுகாண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்... மேலும் பார்க்க

முதல்வரிடம் அன்வா் ராஜா வாழ்த்து

திமுக இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அ.அன்வா் ராஜா, சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அதிமுக முன்னணித் தலைவா்களில் ஒருவராக இருந்... மேலும் பார்க்க

1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா: தெற்கு ரயில்வே தகவல்

சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றங்களைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே உயா் அதிகாரிகள் கூறியதாவ... மேலும் பார்க்க

கல்வியில் சமத்துவம் நிலவ போராடியவா் வசந்தி தேவி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

கல்வியில் சமத்துவமும் சீா்திருத்தமும் ஏற்பட வாழ்நாள் முழுவதும் போராடியவா் மறைந்த கல்வியாளா் வசந்தி தேவி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை... மேலும் பார்க்க