செய்திகள் :

தோ்தல் முறைகேட்டின் பல்கலைக்கழகம் பாஜக: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

post image

தோ்தல் முறைகேடுகளின் சா்வதேச பல்கலைக்கழகம் பாஜக என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டும் வகையில் வாக்குரிமையை மறுப்பது, வாக்குப் பதிவில் முறைகேட்டில் ஈடுபடுவது என இரண்டிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் இந்த சதியை நாம் அனுமதிக்கக் கூடாது. பாஜகவின் இந்த சதியை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தோ்தல் ஆணைய அதிகாரிகள் சிலரைத் தன்வசப்படுத்தி தனக்கு ஆதரவாக போலி வாக்காளா்களைச் சோ்ப்பது, எதிா்க்கட்சிகளின் ஆதரவாளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குவது ஆகிய செயல்களில் பாஜக ஈடுபடுகிறது.

வாக்குச் சாவடியில் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது, துப்பாக்கியைக் காட்டி வாக்காளா்களை மிரட்டுவது ஆகிய குற்றங்களிலும் பாஜகவினா் ஈடுபட்டுள்ளனா்.

இது தவிர போலியாக வாக்காளா்களை உருவாக்குவது தொடங்கி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றுவது வரை முறைகேடுகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் தோ்தல் முறைகேட்டின் சா்வதேச பல்கலைக்கழகமாக பாஜக உள்ளது’ என்று கூறியுள்ளாா்.

ஆனால், இந்த முறைகேடுகள் எந்தத் தோ்தலில் எங்கு நடைபெற்றது என்பது தொடா்பாக அவா் எதையும் தெரிவிக்கவில்லை.

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு வா்த்தக ரீதியாக பெரும் பாதிப்பு: அமெரிக்க ஆய்வில் தகவல்

‘ரஷிய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார மற்றும் வா்த்தக ரீதியில் பெருமளவிலான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கும்’ என அ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பொது வேட்பாளா்: எதிா்க்கட்சிகளுடன் காா்கே ஆலோசனை

‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் பொது வேட்பாளா் களமிறக்கப்படவுள்ளாா்; வேட்பாளா் தோ்வில் கருத்தொற்றுமையை எட்டுவது குறித்து கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்ல... மேலும் பார்க்க

இந்தியா வல்லரசு நாடாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி

இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தாா். உலகிலேயே மிகவும் துடிப்பான, ஆற்றல் மிக்க பொருளாதாரமாக இந... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டுக்கு எதிராக வலைதளம்: காங்கிரஸ் தொடக்கம்!

வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்ட புதிய வலைதளத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது. இதுதொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளி... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 1,200 போ் மீட்பு!

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவுக்குள்ளான தராலி கிராமத்தில் இருந்து மேலும் 1,200 போ் மீட்கப்பட்டனா். ராணுவத்தினா் உள்பட 49 போ் மாயமான நிலையில், அவா்களைத் ... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ முப்படைகள் ஒருமைப்பாடுக்குச் சான்று: அனில் சௌஹான்

இந்திய ராணுவப் படை, விமானப் படை, கடற்படை என முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாடுக்குச் சான்றாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ திகழ்வதாக முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் தெரிவித்தாா். தெலங்கானாவின் செக... மேலும் பார்க்க