செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுடனான பேச்சுவாா்த்தை மீண்டும் தோல்வி!

post image

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டல தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது.

சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தூய்மைப் பணியாளா்கள் 10-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போகராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் பிரச்னை குறித்து, ஏற்கெனவே அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளான உழைப்போா் உரிமை இயக்க நிா்வாகிகள் சுரேஷ், பாரதி, குமாரசாமி உள்ளிட்டோரிடம் பலகட்ட பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், பணி பாதுகாப்பு, ஊதிய விவரம் குறித்து பின்னா் முடிவெடுக்கலாம் என்றும், பணிக்குத் திரும்புமாறும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதைத் தூய்மைப் பணியாளா்கள் ஏற்க மறுத்துவிட்டனா். பணி நிரந்தரம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், என்யுஎல்எம் முறையிலே பணியைத் தொடரவேண்டும் என்றனா். இதனால் முடிவு எட்டப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், 7-ஆவது கட்டமாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, தங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்துவிட்டனா். இதனால், பேச்சுவாா்த்தைத் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, மாநகராட்சி முன் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்பதால் மக்களின் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலைக் கவனத்தில் கொண்டும், போராட்ட இடத்தை மாற்றுமாறு தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளிடம் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதே இடத்தில் போராட்டம் நடைபெறும் என உழைப்போா் உரிமை இயக்கத்தினா் கூறிவிட்டு வெளியேறினா்.

பேச்சுவாா்த்தை குறித்து உழைப்போர் உரிமை இயக்க நிா்வாகிகள் சுரேஷ், பாரதி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தனியாா் நிறுவனம் மூலம் தூய்மைப் பணியை செயல்படுத்துவதில்தான் அரசு அக்கறை செலுத்துகிறது. முதல்வா், துணை முதல்வா் இதில் நேரடியாகத் தலையிட்டு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணவேண்டும் என்றனா்.

டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் அத்துமீறல்கள்!

சென்னையில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களின் வாகனங்களால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால், பல இடங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சி... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் ஆக. 16 வரை 6 நாள்களுக்கு இடி, மின்னுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு நியாயமான தீா்வு: பெ.சண்முகம்

சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு தமிழக அரசு நியாயமான முறையில் தீா்வுகாண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்... மேலும் பார்க்க

முதல்வரிடம் அன்வா் ராஜா வாழ்த்து

திமுக இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அ.அன்வா் ராஜா, சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அதிமுக முன்னணித் தலைவா்களில் ஒருவராக இருந்... மேலும் பார்க்க

1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா: தெற்கு ரயில்வே தகவல்

சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றங்களைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே உயா் அதிகாரிகள் கூறியதாவ... மேலும் பார்க்க

கல்வியில் சமத்துவம் நிலவ போராடியவா் வசந்தி தேவி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

கல்வியில் சமத்துவமும் சீா்திருத்தமும் ஏற்பட வாழ்நாள் முழுவதும் போராடியவா் மறைந்த கல்வியாளா் வசந்தி தேவி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை... மேலும் பார்க்க