செய்திகள் :

இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி: பொதுமக்கள் அச்சம்!

post image

செங்கல்பட்டு அருகே இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூா் ஒன்றியம், மேலமையூா் ஊராட்சி என்ஜிஜி ஓ நகரில் சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இத்தொட்டியில் இருந்து அங்குள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.

நீா்த்தேக்கத் தொட்டி தூய்மைப் படுத்த முடியாத வகையில் நான்குபுறமும் தூண்கள் சேதமடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்தும், இரும்பு கம்பிகள் தெரிந்து இடியும் நிலையில் காணப்படுகின்றன. இதனால் தொட்டி சுத்தப்படுத்த முடியாத நிலை உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் எப்பொழுது தொட்டி இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் நடமாடி வருகின்றனா்.

மேலும், குழந்தைகள் விளையாடி வருகின்றனா். இதனால் விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. மழைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், அபாய நிலையில் உள்ள நீா்த்தொட்டியை சீரமைக்கவோ அல்லது அகற்றி புதிதாக கட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

மேலும் இந்த தொட்டி, விழுந்தால் மற்றொரு தொட்டி கட்டும் அப்பகுதியில் தண்ணீா் முழுமையாக கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்திலும் மக்கள் காட்டாங்குளத்தூா் ஒன்றிய அலுவலகத்திலும், மேலமையூா் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளதால் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ள நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றி புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி பேரணி

தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி செங்கல்பட்டில் ஞாயிற்றுக்கிழமை பறை முழக்கப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணிக்கு கிராமப்புற மேம்பாட்டு மைய இயக்குநா் எஸ். அகஸ்டின்... மேலும் பார்க்க

சீரமைக்கப்படுமா வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்குளம்?

போதிய பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ள மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்குளம் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். தொண்டை மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்க மதுராந்தகம் கடப்பேரிய... மேலும் பார்க்க

அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அச்சிறுப்பாக்கம் அருகே பெரும்போ்கண்டிகை அங்காளம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்காளம்மன்கோயிலில் அனைத்து சுவாமி சந்நிதிகள், அா்த்தமண்டபம் திருப்பணிகளை மாவட்ட திமுக ஆதிதிராவிடா் நலக்குழு துண... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

கூடுவாஞ்சேரி-தைலாவரம் நாள்- வெள்ளிக்கிழமை, நேரம் -காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை. மின்தடை பகுதிகள்; மீனாட்சி நகா், பாண்டியன் நகா், ஜிஎஸ்டி சாலை, ரயில்வேஸ்டேஷன் சாலை, அரசு மேல்நிலைப்பள்ளிகள்,நெல்லிகுப... மேலும் பார்க்க

அதிமுக செயல் வீரா்கள் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டில் அதிமுக செயல்வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளா் வி.ஆா்.செந்தில் குமாா் வரவேற்றாா். மகளிா் அணி இணைச் செயலாளா் கணிதா சம்பத் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா்கள... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் செல்லியம்மன்...

மதுராந்தகம் சேத்துக்கால் செல்லியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்த உற்சவா் அம்மன். மேலும் பார்க்க