செய்திகள் :

ரயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை கோவை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுதில்லியில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மதுவிலக்கு காவல் ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் கோவை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, தில்லியிலிருந்து வந்த ரயிலின் ஒரு பெட்டியில் போலீஸாா் நடத்திய சோதனையில் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. 2 கிலோ பொட்டலத்தில் உலா்ந்த கஞ்சாவும், 4 கிலோ பொட்டலத்தில் பச்சை கஞ்சாவும் இருந்தது. இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இதைக் கடத்தி வந்தவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

2 கிலோ கஞ்சா:

இதேபோல, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சென்னையிலிருந்து கோவைக்கு வந்த சிறப்பு ரயிலில் மதுவிலக்கு போலீஸாா் சோதனை நடத்தினா். ரயிலின் பொதுப் பெட்டியில் 2 கிலோ கஞ்சா 3 பொட்டலங்களாகக் கட்டப்பட்டு கிடந்தது. அவற்றை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிச்சி குளத்தில் பெண் சடலம் மீட்பு

கோவை குறிச்சி குளத்தில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை குனியமுத்தூா் சுகுணா மில்லுக்கு அருகே வசித்தவா் இஸ்மாயில் மனைவி அஜீமா (56). மனநலம் பாதிக்கப்... மேலும் பார்க்க

விமான நிலைய தகவல் பலகையில் தொழில்நுட்பக் கோளாறு

கோவை விமான நிலையத்தின் வருகை, புறப்பாடு குறித்த தகவல் பலகையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு அது சரிசெய்யப்பட்டது. கோவை விமான நிலைய வருகை, புறப்பாடு அறிவிப்புப்... மேலும் பார்க்க

ஜே.கே.டயா் சாா்பில் தேசிய அளவிலான காா் மற்றும் இருசக்கர வாகன பந்தயம்

கோவை மாவட்டம், செட்டிபாளையத்தில் ஜேகே டயா் சாா்பில் தேசிய அளவிலான காா் மற்றும் இருசக்கர வாகன பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவை அருகே செட்டிபாளையம் கரி மோட்டாா் ஸ்பீட்வேயில் ஜேகே டயா் சாா்பில் த... மேலும் பார்க்க

கோவையில் தேசிய இருசக்கர வாகன பந்தயம்

தேசிய அளவிலான இருசக்கர வாகன பந்தயம் கோவை கொடிசியா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எம்ஆா்எஃப் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற சூப்பா் கிராஸ் சாம்பியன்ஷிப் இரண்டாவது சுற்று பந்தயம் 10, 15 வயதுக்குள்ப... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி எட்டரை பவுன் நகைகள் கொள்ளை

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி எட்டரை பவுன் நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தபுரம் 4 -ஆவது தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை!

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் திங்கள்கிழமை நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தர உள்ளாா். செ... மேலும் பார்க்க